நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குட்டியை காப்பாற்ற முதலையை வதம் செய்த யானை! - வீடியோ

 குட்டியை காப்பாற்ற தாய் யானை முதலையை காலால் மிதித்து கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஸாமியா,

யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மீறினால் யானையைவிட ஆக்ரோஷமான விலங்கு வேறு எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு மாறிவிடும்.

இந்தநிலையில், ஆப்ரிக்காவின் ஸாமியா நாட்டில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில்  அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.


நீர் குட்டையில் தாயுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானையை அங்கிருந்த முதலை லாவகமாக பிடிக்க முயல, குட்டிய யானை பிளிரியது. உடனே ஓடிந்த வந்த தாய் யானை தனது  குட்டியை காப்பாற்ற முதலையை தன் காலாலேயே மிதித்து கொன்றுள்ளது. இதனை கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜாம்பியாவில் சுற்றுலா சென்ற ஒரு குழு படமாக்கி சமூக வலைதளங்களில்  வெளியிட்டுள்ளது. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!