நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சீனாவில் ரூ.1700 கோடி அளவுக்கு ஊழல் செய்த முன்னாள் வங்கி தலைவருக்கு மரண தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு


சீனாவில், லஞ்சம், பலதார மணம் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் வங்கித் தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

China Huarong Asset Management என்ற வங்கியின் தலைவராக இருந்த லாய் ஜியாமின் என்பவர் கடந்த 2018 ல் சுமார் 1700 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

அதில் தீர்ப்பளித்த டியான்ஜின் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சீனாவின் மிகவும் ஊழல்வாதியான நிதித்துறை அதிகாரி என அழைக்கப்படும் இவர் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்கு பெரும் ஆபத்து விளைவித்தார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!