நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவிடம் அரிசியை வாங்கும் நிலைக்கு சரிந்த வியட்நாம் - பின்னணி குறித்து விரிவான அலசல்

 


உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான வியட்நாம், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அரிசியை வாங்க தொடங்கியுள்ளது என்று தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதியாளரான வியட்நாம், உள்நாட்டு அரிசி விலையேற்றம் மற்றும் ஒன்பது ஆண்டுகளில் மிக உயர்ந்த உள்நாட்டு விநியோகம் காரணமாக, முதல் முறையாக இந்தியாவிடமிருந்து அரிசியை  வாங்கத் தொடங்கியுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அரிசி வாங்குதல் ஆசியாவில் இறுக்கமான  தானிய உற்பத்தி சூழலை எடுத்துக்காட்டுகின்றன, இதனால் 2021 ஆம் ஆண்டில் அரிசி விலை உயரக்கூடும், மேலும் இது தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருந்து பாரம்பரியமாக அரிசி வாங்குபவர்களை இந்தியாவிடமிருந்து வாங்கவைக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது.  


இந்திய வர்த்தகர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு 70,000 டன் 100% உடைந்த அரிசியை ஒரு டன்னுக்கு 310 டாலர் விலையில் இலவச போக்குவரத்து செலவு (FOB) அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "நாங்கள் முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்கிறோம்" என்று நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ண ராவ் தெரிவித்தார்.

ALSO READ :  துபாய்க்கு காய்கறி அனுப்பும் MS Dhoni, கதையல்ல, நிஜம்!

"இந்திய விலைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. மற்ற நாடுகளுடன் இருக்கும் மிகப்பெரிய விலை வேறுபாடு இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்குகிறது. " வியட்நாமின் 5% உடைந்த அரிசி ஒரு டன்னுக்கு $ 500- $ 505 வரை வழங்கப்படுகிறது, இதன் இந்திய விலைகள் $ 381- $ 387 மட்டுமே ஆகும்.

சுருங்கிவரும் பொருட்கள் உற்பத்தியால் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த கவலைகளும் அதிகரிக்கும், மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக இறக்குமதி தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான உணவுப்பஞ்சமும் அதிகரித்து வருகிறது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் பசியால் அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கிறது, கோவிட்-19 தொற்றுநோய் வருமானங்களைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.


உலகளாவிய தொற்றுநோய் வியட்நாம் மற்றும் பிற நாடுகளையும் அரிசி கையிருப்பு வைக்க தூண்டியுள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். உலகெங்கிலும் கொரோனா வைரஸால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியில் உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக 270,000 டன் அரிசியை சேமித்து வைப்பதாக வியட்நாம் கடந்த ஆண்டு அறிவித்தது.

ALSO READ : அதிசயம் ஆனால் உண்மை: இந்தியாவிற்குப் பிறகு 2020-ல் DD, AIR நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்த நாடு பாகிஸ்தான்!!

வியட்நாமில் வர்த்தகர்கள், இந்தியாவில் இருந்து அரிசி 2016/17 முதல் அரசாங்க இருப்புக்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பீட்டளவில் அதன் மலிவான விலை குறைந்த தரத்தை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தனர். "அரிசி தரம் மிகவும் மோசமாக உள்ளது, இது மனிதர்களுக்கு நேரடி நுகர்வுக்கு நல்லதல்ல, ஆனால் விலங்குகளின் தீவனம் மற்றும் பீர் தயாரிப்பதற்கு மட்டுமே" என்று ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த ஒரு அரிசி வர்த்தகர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் வியட்நாமின் மொத்த நெல் உற்பத்தி 1.85% குறைந்து 42.69 மில்லியன் டன்னாக இருந்தது, இது சுமார் 21.35 மில்லியன் டன் அரிசிக்கு சமம் என்று அரசாங்கத்தின் பொது புள்ளிவிவர அலுவலகத்தின் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் நாட்டின் அரிசி ஏற்றுமதி 3.5% குறைந்து 6.15 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் அதிகமான அரிசி தேவை இந்திய விலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது, ஆனால் நம்மிடம் போதுமான இருப்பு உள்ளதன் காரணமாக இன்னும் போட்டித்தன்மையுடன் உள்ளன என்று இந்தியாவின் அரிசி வணிகத்தின்துணைத் தலைவர் நிதின் குப்தா கூறினார். விலை வேறுபாடு இருக்கும் வரை வியட்நாம், இந்தியாவிலிருந்து அதிகமாக அரிசி கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்று குப்தா கூறினார்.

கடந்த டிசம்பரில், உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளர் சீனா முப்பது ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அரிசியை வாங்கத் தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் இந்தியா 14 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது என்று வர்த்தக அமைச்சகத்தின் தற்காலிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ :  'மகிழ்ச்சி'யின் அளவீடுதான் என்ன? - ஆய்வுத் தகவலும் 'விருப்ப' வாழ்க்கையும்!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!