நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

27 மனைவி 150 குழந்தைகளுடன் ஒருவர் கூட்டுக்குடும்பம்... யாரு சாமி இவரு.

யாரு சாமி இவரு என்று கேட்கும் அளவிற்கு, ஒன்றல்ல, இரண்டல்ல 27 மனைவிகளுடன் கனடாவிலுள்ள, பவுண்டிஃபுல் பகுதியில் வசித்து வருபவர் தான் வின்ஸ்டன் பிளாக்மோர்.

64 வயதாகும் வின்ஸ்டன் பிளாக்மோர், 27 மனைவி, 150 குழந்தைகள் என , ஒரே வீட்டில், வானத்தைப்போல படத்தில் வரும் விஜயகாந்த் போல கூட்டு குடும்பமாய் வசித்து வருகிறார்.

திருமணத்துக்கு பின்னர், ஒருவரின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். கணவன்மார்கள், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவது, அவர்களை மகிழ்விப்பது என மொத்தமாக மாறிப்போவர்கள். பலரிடம் திருமண வாழ்வு குறித்து கேட்டாலே, சலிப்புடன் தான் பதில் வரும்.

ஆனால் இவரின் கதையோ வித்யாசமானது..... சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி( Polygamy ) முறையில், மகிழ்ச்சியாக, ”எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்று வின்ஸ்டனின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பாலிகேமி( Polygamy ) என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறை. இதைத்தான் வின்ஸ்டன் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.

வின்ஸ்டனின் 17ஆவது மனைவியின் மூத்த மகன் மெர்லின். இவரின் மூலம் தான் ”மெகா குடும்பம்” பற்றியான தகவல் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம் . ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்தார்.

தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ அழைப்பதாக பதிவுட்டுள்ளார் மெர்லின். 3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம்’ என்று மெர்லின் கூறியுள்ளார்.

ஒரு மனைவியை வைத்தே வாழ்கையை நடந்துவது கடினம். இன்னும் சிலருக்கோ ஒரு மனைவிக்கே வழியில்லை. இந்த நிலையில் இத்தனை மனைவி மற்றும் குழந்தைகளையும் சமாளித்து, வெற்றி நடைப்போட்டுக்கொண்டிருக்கும் இவரை பார்த்தால் பொறாமையாக உள்ளதாக வலைத்தளவாசிகள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!