நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் நலம் குறித்து வதந்தி... உறைய வைக்கும் பனி நீரில் ஞானஸ்நானம் எடுத்த ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்ய அதிபர் புதினின் உடல் நலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் ஞானஸ்நானம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

68 வயதான விளாடிமிர் புதின், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஏசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த நிகழ்வைக் குறிக்கும் எபிபனி நாளில் புதினும் ஞானஸ்நானம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் தற்போது உறைபனிக் காலம் என்பதால் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப வெப்பநிலையில் புதின் மாஸ்கோ தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?