நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜெர்மனி: குளிர்காலத்தில் வீடற்றவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட ’உல்மர் குடில்கள்.

கடுமையான பனிப்பொழிவில், வீடற்ற மக்கள் தூங்குவதற்காக, ஜெர்மன் நகரமான உல்மில் பாதுகாப்பான குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெர்மனி நாட்டில் தற்போதைய குளிர், பனிக்கால மாதங்களில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக 'உல்மர் நெஸ்ட்' என்று அழைக்கப்படும் குடில்கள், முனிச்சிலிருந்து மேற்கே 75 மைல் தொலைவில் உள்ள உல்ம் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது . மரம் மற்றும் எஃகு ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்ட இந்த குடில்கள் பூங்காக்கள் மற்றும் பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக நகரத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வீடற்றவர்களை காற்று மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்க, படுக்கைகள் வெப்ப காப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை இரண்டு நபர்களின் பயன்பாட்டிற்கு போதுமானவை. இந்த குடில்களில் கேமராக்கள் எதுவும் இல்லை, அவை பயன்பாட்டில் இருக்கும்போது, சென்சார்கள் அறிவிப்பு செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை செயல்படுத்தும் நபர்கள் கூறும்போது “சில தாமதங்களுக்கு பிறகு, வானிலை மோசமான நிலைக்குத் திரும்பத் தொடங்கியபோதே இந்த குடில்களை உருவாக்கிவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக கொரோனா காரணமாக தாமதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டாலும், தற்போதைய மிகவும் குளிர்ந்த இரவுகளில் வீடற்றவர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்” என கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!