நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

துபாய்க்கு காய்கறி அனுப்பும் MS Dhoni, கதையல்ல, நிஜம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) பண்ணையில் விளையும் காய்கறிகளை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்கண்டின் வேளாண்மைத் துறை இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.


 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) பண்ணையில் விளையும் காய்கறிகளை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்கண்டின் வேளாண்மைத் துறை இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.


எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள தனது விவசாயப் பண்ணையில் காய்கறிகளை பயிரிட்டுள்ளார். அவற்றை துபாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தோனியின் பண்ணையில் விளையும் (Agriculture) காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொறுப்பை ஜார்க்கண்டின் வேளாண்மைத் துறை எடுத்துள்ளது.

காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ : தென் கொரியாவில் வண்ண மீன்களை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்” தண்ணீருக்குள் இருந்தபடி பார்வையாளர்களை வரவேற்கும் நீச்சல் வீரர்கள்..!

All Seasons Farm Fresh என்ற நிறுவனம் பல விவசாய பொருட்களை வெளி நாடுகளுக்கு அனுப்ப உதவுகிறது. எம்.எஸ்.தோனியின் காய்கறிகளை துபாய்க்கு (Dubai) வழங்கும் பணியையும் இந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.  

தோனியின் (MS Dhoni) சுமார் 43 ஏக்கர் அளவுக்கொண்ட விவசாய பண்ணை வீட்டில் சுமார் 10 ஏக்கர் அளவில் ஸ்ட்ராபெர்ரி, முட்டைக்கோஸ், தக்காளி, ப்ரோக்கோலி, பட்டாணி, உருளைக்கிழக்கு மற்றும் பப்பாளி என பல உணவுப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இது தவிர, மிகப் பெரிய அளவில் முட்டைக்கோஸ், தக்காளி, பட்டாணி ஆகியவையும் பயிரிடப்பட்டுள்ளன.

தோனியின் (MS Dhoni) வயல்களின் விளையும் காய்கறிகள் organic காய்கறிகளாகும். தற்போது organic காய்கறிகளை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இது தவிர, தோனியின் பால்பண்ணையில் இருந்து விற்பனைக்கு வரும் பால் ராஞ்சி மக்களின் விருப்பப் பாலாக மாறிவிட்டது.  

தற்போது மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் துபாயில் விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார். துபாயில் புத்தாண்டு கொண்டாடினார்.  

கிரிக்கெட்டில் சாதனை படைத்த தோனி, தற்போது விவசாயத்திலும், தொழிலும் ஆர்வம் காட்டிவருகிறார்.


ALSO READ:  2021 புத்தாண்டு அன்றே கோடீஸ்வரரான அதிர்ஷ்டசாலி!

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!