நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செல்போனில் பேசினால் கொரோனா பரவும்: மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

சுரங்கப் பாதை போன்ற இடங்களில் செல்போன்களில் பேசினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
 
ஹைலைட்ஸ்:

சுரங்கப் பாதை போன்ற இடங்களில் செல்போன்களில் பேசினால் கொரோனா பரவ வாய்ப்பு.

கொரோனா பரவும் முறை தொடர்பாக பிரெஞ்ச் நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் அறிவுரை.

துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணிந்தாலே போதும்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகின் சில நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதேசமயம், கொரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய கொரோனா வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுள்ளது. பிரிட்டன் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளிலும் மரபியல் மாற்றம் பெற்ற கொரோனா பரவி வருகிறது. கொரோனா இரண்டாவது அலையால் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரான்ஸிலும் கொரோனா 2ஆவது அலையால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், பிரெஞ்ச் நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் அமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் கொரோனா பரவும் முறை தொடர்பான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி, சரீர விலகலை கடைபிடிக்க முடியாத சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மற்றவர்களிடம் பேசினாலோ, செல்போனில் பேசினாலோ கொரோனா பரவும் அபாயம் உள்ளது. 

எனவே, அந்த இடங்களில் மற்றவர்களிடம் பேசுவதையும், செல்போன் உரையாடல்களையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணிந்தாலே போதும்.
 பொதுப் போக்குவரத்து, பொது வெளி, மற்றவர்களிடம் சரீர இடைவெளி விட்டு உரையாடும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

முன்னதாக, துணியாலான முகக்கவசங்களை விட சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பொதுவெளியில் பயன்படுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அரசு பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!