நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தாய்லாந்தில் துதிக்கையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி.. இறந்த பின்பும் வழிபாடு செய்த உரிமையாளர்.

தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே ப்ளீடி(Tenguay Pleedee).இவர் அங்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 தேதி அன்று, தென்குவே ப்ளீடி வளர்த்து வரும் பன்றி நான்கு குட்டிகளை ஈன்றது.

மூன்று பன்றிக்குட்டிகள் இயல்பாக பிறந்த நிலையில், கடைசி பன்றிக்குட்டி மட்டும், துதிக்கை போன்ற மூக்கு, பெரிய காதுகள், பெரிய கண்கள் மற்றும் நீண்ட நாக்குடன் பிறந்தது.

வித்தியாசமாக பிறந்த இந்த பன்றிக்குட்டி, யானையின் அம்சங்களுடன், பிள்ளையார் போன்று இருந்ததால், மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. 

துதிக்கை போன்ற மூக்குடன் பிறந்ததால் மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்த பன்றிக்குட்டி பிறந்த 30 நிமிடங்களில் பரிதாபமாக இறந்தது. பன்றிக்குட்டி இறந்த பின்பும், சிறிய தூபம் போன்ற ஒன்றில் மலர்கள் கொண்டு அலங்கரித்து, அந்த பன்றிக்குட்டியை வைத்து வழிபட்டார் தென்குவே ப்ளீடி. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், இந்த அபூர்வ பன்றிக்குட்டியை வழிபாடு செய்து சென்றனர்.

இது குறித்து தென்குவே ப்ளீடி கூறுகையில், பன்றிக்குட்டி இறந்தபோதிலும், அதனை அதிர்ஷ்டம் வாய்ந்ததாக கருதுவதாகவும், அந்த பன்றிக்குட்டி அவர் வீட்டில் பிறந்ததுக்கு காரணம் உண்டு என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!