நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?

 மனித குலத்தின் பரிணாம மற்றும் நாகரீக வளர்ச்சி குறித்து எல்லோரும் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் நாகரீக வளர்ச்சிக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த ஆதி மனிதனான நியாண்டர்தால் மனிதர்கள் உலகின் முதல் ஓவியர்களாக இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என சொல்லும் விதமாக அமைந்துள்ளது Proceedings of the National Academy of Sciences வெளியிட்டுள்ள ஆய்வு இதழின் அறிக்கை. 


ஸ்பெயின் நாட்டின் மால்கா பகுதியில் உள்ள Ardales குகையில் நியாண்டர்தால் மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அந்த குகையில் உள்ள ஓவியங்களில் நியாண்டர்தால் மனிதர்கள் சிகப்பு நிறமிகளை புற்று போல உள்ள குகைகளின் பாறைகளில் (Stalagmite) வைத்து பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறமிகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் இயற்கையான வண்ண பூச்சு காலவைகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.  


இதனை சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என அந்த ஆய்விதழில் சொல்லப்பட்டுள்ளது. 

மேலும், அந்த காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்தே அந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. 

“இதன் முக்கியத்துவம் என்னவென்றால் அவர்கள் நம்மை போலவே வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களது செயல்பாடுகளும் நம்மை போலவே இருந்துள்ளன. குகைகளில் ஓவியம் வரைந்திருப்பது அதற்கு மிகமுக்கிய சான்று” என தெரிவித்துள்ளார் Proceedings of the National Academy of Sciences-இல் ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் Joao Zilhao. 



also read : 3700 ஆண்டுகள் பழமையான புராதன சின்னம் கண்டுபிடிப்பு.. கணித வரலாற்றின் முக்கிய மைல்கல்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!