நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டுக்குள் நுழைந்து பாடாய் படுத்திய நாகப்பாம்பு: பீதியைக் கிளப்பும் வைரல் வீடியோ

 இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள்  இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு வீட்டின் சமையலறைக்குள் ஒரு ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று மறைந்திருப்பதைக் காண முடிகின்றது.

அந்த சமையலறைக்குள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் செல்கிறார். அங்கு பாம்பு  இருப்பதைப் பார்த்த அவர் அச்சத்தின் உச்சிக்கு சென்று அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடுகிறார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து அடைத்து சாத்துகிறார்கள். பின்னர், பாம்பைப் பிடிக்க, பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் வரவழைக்கப்படுகிறார்.

பாம்பு பிடிப்பவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாம்பு காஸ் சிலிண்டருக்குப் பின்னால் மறைந்துகொள்வதை வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை மிரட்டும் வகையில் உள்ளன.

பாம்பு பிடிப்பவர் பாம்பை வெளியே எடுக்க முயன்றவுடன், அது தன் ஆட்டத்தைக் காட்டத் துவங்குகிறது. இதைப் பார்த்து அந்த நபரும் சற்று அசந்து விடுகிறார்.

பாம்பு வெளியே வந்தவுடனேயே கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொள்வதையும், தொடர்ந்து கொத்த முயற்சி செய்வதையும் காண முடிகின்றது. பாம்பின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையைப் பார்த்து, ’இந்த பாம்பு செம காண்டில் இருக்கிறது’ என பாம்பு பிடிப்பவரும் கூறுகிறார்.

எனினும், இந்த வேளையில் அந்த நபர், நாகப்பாம்பு தொடர்பான சில முக்கிய தகவல்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த நாகப்பாம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர், அதைப் பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தார்.

அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்:


இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ வைரலாகி வருகிறது. MIRZA MD ARIF என்ற சேனலில் YouTube இல் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


ALSO READ : இந்த பூனைக்கு மட்டும் 4 காது எப்படி?… இணையத்தை கலக்கும் துருக்கி மிடாஸ்…!



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!