நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!

 விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்களும் அவ்வவ்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா...


விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒரு புறம் இருக்க, விமானத்தின் டயர் பகுதியில், மிகச் சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்களும் அவ்வவ்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா...

ஆம்... விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து, விமானத்தின் அடிபாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர். முதலில் எகிறிக் குதித்து, விமானத்தின் டயர் மீது ஏறி விட்டால், அதன் பின், டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என, விமான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவ்வாறு டயர் பகுதியில் ஒளிந்து கொள்பவர்கள், டயர் எப்போது உள்ளிழுக்கும் அல்லது வெளியேறும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.  இதை கணிக்க தவறுவோர், டயரில் சிக்கியோ அல்லது கீழே தள்ளப்பட்டோ உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் போது, அங்கு மிகவும் குளிரான தட்ப நிலை இருக்கும்  என்பதால், அங்கே நீண்ட நேரம்  தாக்கு பிடிப்பதும் மிகவும் கடினம். 

 அந்த வகையில், ஒரு  நபர் 11 மணி நேரம் சரக்கு விமானத்தின் டயர் பகுதியில் மறைந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது, ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது இது கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நபர் டச்சு இராணுவ காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 11 மணி நேர விமானத்தில் சரக்கு விமானத்தின் டயர்ப் பிரிவில் ஒருவர் பதுங்கிக் கொண்டு பயணித்து அதிசயமாக உயிர் தப்பினார். ஞாயிற்றுக்கிழமை காலை ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் விமானம் வந்தபோது டச்சு அதிகாரிகளால் ஸ்டோவேவே மூக்கு சக்கரப் பகுதியில் மறைந்திருந்தது, அறிக்கைகளின்படி.

விமானம் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து புறப்பட்டதிலிருந்து அந்த நபர் சக்கரப் பிரிவில் ஒளிந்து கொண்டார் என ஷிபோல் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் காவல்துறையினர் கூறினர். அவருக்கு 16-35 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.

அந்த நபர் 'உடல் அளவில் நன்றாக இருக்கிறார்' என்று டச்சு இராணுவ போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு  அந்த நபர் சில அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது பலருக்கு ஆச்சர்யத்தையும் கொடுத்துள்ளது.

"இந்த நபர் உயிருடன் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். விமானத்தில் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில், சுமார் 10,000 (கிலோமீட்டர்கள்) தூரத்திற்கு விமானம் பறந்த நிலையில்,  அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தோம்" என்று ராயல் டச்சு இராணுவ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் ஹெல்மண்ட்ஸ் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இதே போன்று  பயணிகள் லக்கேஜ்களை விமானத்தில் ஏற்றுபவர்கள், லக்கேஜ்களை ஏற்றி விட்டு அங்கே தூங்கி போய் தவறுதலாக பயணிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.


ALSO READ : உலகப்போரின் போது காணாமல் போன விமானம் இமயமலையில் கண்டுபிடிப்பு...!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!