நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

‘கண்களில் ஏன் இந்த கண்ணீர்’: சுவாரஸ்ய தகவல்..!!

 சோகம், துக்க உணர்வுகள் அதிகமாகும் போது, நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். மனித உணர்வை வெளிப்படும் வகையில் வெளிப்படும் கண்ணீரில் பல வகைகள் உள்ளன என்றால் ஆச்சயர்மாக இருக்கிறதா...


  • அழுவதால் பல நன்மைகள் உள்ளன.
  • மனித மூளையில் ஒரு லிம்பிக் அமைப்பு உள்ளது.
  • வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

சோகம், துக்க உணர்வுகள் அதிகமாகும் போது, நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். மனித உணர்வை வெளிப்படும் வகையில் வெளிப்படும் கண்ணீரில் பல வகைகள் உள்ளன என்றால் ஆச்சயர்மாக இருக்கிறதா... நாம் அழும்போது ஏன் நம் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி இன்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கண்ணீரில் மூன்று வகை 

கண்ணீரில் பல வகைகள் உள்ளன. விஞ்ஞானிகள் அவற்றை முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். முதல் வகை அடிப்படைக் கண்ணீர். இந்த வகையில் கண்களை வறட்சியிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணர்ச்சியற்ற கண்ணீர் வருகிறது. இரண்டாவது பிரிவில் உணர்ச்சியற்ற கண்ணீரும் அடங்கும். இந்த கண்ணீர் ஒரு குறிப்பிட்ட வாசனையின் எதிர்வினையிலிருந்து வருகிறது. வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருவதை நாம் அனைவரும் அறிவோம். மூன்றாவது அழும் போது வரும் கண்ணீர், இது உணர்ச்சி பூர்வமானது.

கண்ணீர் வரும் காரணம்

மனித மூளையில் ஒரு லிம்பிக் அமைப்பு உள்ளது. இதில்  ஹைபோதாலமஸ் என்ற ரசாயனம் உள்ளது. இந்த பகுதி நரம்பு மண்டலத்துடன் நேரடி தொடர்பில் உள்ளது.  மகிழ்ச்சியோ, துக்கமோ, வலியோ  நமது மனமும் உடலும் தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக ஏற்பட்டால், இந்த ரசாயனத்தில் தானாக மாற்றம் ஏற்பட்டு நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்புகிறது.

நரம்பியக் கடத்திகளால் சமிக்ஞை கிடைக்கும் நிலையில், உணர்ச்சி மேலிடும் போது நாம் அழுகிறோம். அழும் போது, ​​உடலில் பல வகையான எதிர்வினைகள் நடைபெறுகின்றன. இது மிக மகிழ்ச்சியான நேரத்திலும், துன்ப நேரங்களிலும் நடக்கும். இதன் காரணமாக, உடலில் பல வகையான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அட்ரினலின் அளவு மாற்றங்கள் உட்பட பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அழுவதால் பல நன்மைகள் 

இது தவிர, அழுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதனால் கண்கள் மட்டுமின்றி மனநலமும் சிறப்பாக இருக்கும். உடலில் இருந்து வியர்வை மற்றும் சிறுநீர் வெளியேறும் போது உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதைப் போல , கண்ணீர் வந்தாலும் கண்கள் சுத்தமாகும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

கண்ணீரில் 98 சதவீதம் நீர் உள்ளது, இது கண்களை சுத்தம் செய்து, நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. அதே சமயம்,  கண்ணீரில் மன அழுத்த ஹார்மோன்கள் மற்றும் நச்சுகளின் அளவு அதிகமாக இருப்பதைக் காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். கண்ணீர் மூலம் மன அழுத்தம் விலகுவதால், அது மன ஆரோக்கியத்திற்கும், உடல ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.


ALSO READ : பூமி எப்போது அழியும்? புதிரை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!