நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் கறிவேப்பிலை! இப்படி பயன்படுத்தி பாருங்க

 பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைகளுள் கூந்தல் பிரச்சினை முக்கிய இடம் பெறுகின்றது. 


முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் இராசயனம் பொருட்கள்படுவதாலும் முடி அதிகம் கொட்டுகின்றது. 

இதற்காக பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் போக்க முடியும். அதில் கறிவேப்பிலை பெரிதும் உதவுகின்றது.  

   தற்போது எப்படி கறிவேப்பிலையை பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.  


  • கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.

  • கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.  

  • கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்து அதை முடியில் தடவி ஊற வையுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து தலையை அலசிவிடுங்கள்.

  • சில செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

  • கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் 2 ஸ்பூன் என எடுத்துக்கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். ஆறியதும் வடிகட்டி தலையின் வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடி உதிர்வை தடுக்க சிறந்த வழி.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!