நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு டீ போதும்

 பொதுவாக ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது.

தில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறன.

இதில் தினமும் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகின்றது. தற்போது அதில் எப்படி டீ தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.


தேவைப்படும் பொருட்கள்



தண்ணீர் - 4 கப்

கிரீன் டீ பைகள் - 3

தேங்காய்பால் - கால் கப்

கிரீம் பால் - 2 தேக்கரண்டி

நாட்டுச் சர்க்கரை -1 தேக்கரண்டி


செய்முறை


தேங்காய் பால் கிரீன் டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு, மூன்று கிரீன் டீ பைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் 1/4 கப் தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் கிரீம் பாலை சேர்த்து நன்றாகக் குலுக்கி விட்டு, பின் கிரீன் டீ பையை அகற்றிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் அதில் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.


குறிப்பு


தேங்காய் பால் டீயை அதிகமாக அருந்துவதன் மூலம் கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். அதோடு, செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படும்.


நன்மைகள்


தேங்காய் பாலில் டீ அருந்துவது உங்கள் சருமத்தை அற்புதமாக வைத்திருக்க உதவும்.

தேங்காய் பால் டீயும் உடல் எடையைக் குறைக்க உதவும். எடையை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புகளை அழிக்கும்.

நீங்கள் தேங்காய் பால் டீயை அருந்தினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானக் கோளாறுகள் மற்றும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஆகியவற்றில் இருந்தும் விடுபட தேங்காய் பால் டீ வழிவகுக்கும்.   



ALSO READ : பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!