நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உணவே மருந்து; ஒற்றை தலைவலிக்கு தீர்வாகும் உணவுகள்!

 நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.


  • மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது.
  • வயிற்று பிரச்சனையையும் போக்கும் மற்றொரு முக்கிய பானம் மூலிகை தேநீர்.
  • நீரிழப்பு முக்கிய காரணமாக அமைகிறது.


ற்றைத் தலைவலி என்பது மிகவும் பொதுவான தலைவலி வகைகளில் ஒன்றாகும். நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.

 ஒற்றைத் தலைவலி என்பது பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடித்து அன்றாட வாழ்க்கை பணிகளை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கு ஒரே தீர்வு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து கொள்வது தான். ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். சில உணவுகள் ஒற்றை தலைவலியை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறந்தவை. 

1. தயிர்: 

பல நேரங்களில் ஒற்றைத் தலைவலி ஏற்பட வயிறு தொடர்பான பிரச்சனை, நீரிழப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைகிறது. அந்த வகையில், தயிரை உனவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வது, செரிமானம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை நீக்குவதோடு, நீரிழப்பைக் கட்டுப்படுத்தி தலைவலி ஏற்படும் வாய்ப்பு பெரிதும் குறைம்கிறது.


2. மூலிகை தேநீர்: 

டலுக்கு நீர்சத்து கொடுத்து, வயிற்று பிரச்சனையையும் போக்கும் மற்றொரு முக்கிய பானம் மூலிகை தேநீர். இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது. ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் இது கூடவே பல நன்மை பயக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உதாரணமாக, புதினா இலை சேர்த்த தேநீர் சைனஸ் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது. 


3. மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் முந்திரி போன்றவை மெக்னீசியம் நிறைந்தவை. மெக்னீசியம் நிறைந்த உணவு ஒற்றைத் தலைவலியைக் குறைக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. எனவே இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், ஒற்றைத் தலைவலி பிரச்சனை படிப்படியாக குறையும்.

4. ஒமேகா 3 நிறைந்த உணவுகள்

கடல் மீனில் போதுமான அளவு ஒமேகா 3 உள்ளதால், உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கடல் உணவில், குறிப்பாக மீன் உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ள நிலையில், இது ஒற்றை தலைவலியைக் கட்டுப்படுத்த மிகவும் உதவும்.


ALSO READ : குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா? இனி கவலையே வேண்டாம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!