நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்களே! உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்.....

 பொதுவாக இன்றைய காலத்தில் பெண்களைப் போலவே ஆண்களும் தங்கள் சருமத்தின் மீது அதிக அக்கறைக் கொண்டுள்ளனர்.


ண்களுக்கு போதுமான நேரம் கிடைக்காததால் அல்லது சோம்பேறித்தனத்தால், அவர்களால் தங்கள் சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க முடிவதில்லை.

இதனால் சில ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள்.

இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு ஒரு சில இயற்கை வழிகள் கூட உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


  • சரும கருமையைப் போக்க ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

  • சருமத்தின் நிறத்தை அதிகரிக்க  ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் அல்லது கருமையான பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

  • சரும நிறத்தை அதிகரிக்க ஒரு பௌலில் நற்பதமான தக்காளி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம், கை, கால் பகுதியில் தடவி 20 நிமடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • சருமத்தின் கருமையை நீக்க வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, சருமத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். வேண்டுமானால், வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

  • கருவளையங்களைப் போக்க .உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.

  • சரும நிறத்தை மேம்படுத்தவும், சருமத்தை மென்மையாக்கவும் 2 டீஸ்பூன் ஓட்ஸை மோரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால்களில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

  • சருமம் பிரகாசமாக ஜொலிக்க 3 டீஸ்பூன் துவரம் பருப்பை நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்த கலந்து, கருமையாக உள்ள முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!