நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குளிர்காலத்தில் முடி மற்றும் சரும பராமரிப்புக்கு சூடான நீர் அல்லது குளிர்ந்த நீர்- எது சிறந்தது?

உங்கள் முகத்தை கழுவுவதற்கு வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்தவும்.
சௌமாலி ஆதிகாரி, பியூட்டி மற்றும் லைஃப்ஸ்டைல் கண்டெண்ட் கிரியேட்டர், குளிர் மாதங்களில் முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான சில எளிய குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

முடி பராமரிப்பு

தலைமுடியைக் கழுவுவதற்கு சூடான அல்லது குளிர்ந்த நீரா? வெந்நீர் குளியல் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும், அதைக் கொண்டு தலைமுடியைக் கழுவுவது வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லையை உண்டாக்கும். எப்போதும் வெதுவெதுப்பான அல்லது முடிந்தால், குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவவும்.

கண்டிஷனிங்;
 குளிர்காலம் இயற்கையாக உங்கள் தலைமுடியை உலர வைக்கிறது. அத்துடன் ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் ஸ்ப்ரேக்கள் பயன்படுத்துவது முடியை கூடுதலாக உலர வைக்கும். எனவே கூடுதல் ஊட்டச்சத்துக்கு எண்ணெய் சார்ந்த மாய்ஸ்சரைசர் அவசியம்.

எண்ணெய்: 
குளிப்பதற்கு முன் எண்ணெய் மசாஜ் செய்வது மிகவும் முக்கியம். இது உங்கள் குளிர்கால சீசன் முடி வழக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

ஹேர் மாஸ்க்: 
குளிர்காலத்தில் பொடுகு மற்றும் உச்சந்தலையில் எரிச்சல் அதிகம் வரும். பொடுகைத் தவிர்க்க எலுமிச்சை சார்ந்த ஹேர் மாஸ்க்குகளை முயற்சி செய்யலாம்.

சரும பராமரிப்பு

வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர்: 
உங்கள் தலைமுடியைப் போலவே, உங்கள் முகத்தைக் கழுவுவதற்கு வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது உலர்ந்து போகும். வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது சிறந்த வழி.

தேங்காய் எண்ணெய்: 
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மட்டுமல்ல, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

வைட்டமின் சி சீரம்: 
வருடத்தின் நேரத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு நல்ல வைட்டமின் சி சீரம் எப்போதும் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின்: 
கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின், உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுவது மட்டுமல்லாமல், மென்மையாகவும், களங்கமற்றதாகவும் மாற்றும்.

எக்ஸ்ஃபாலியேட்டிங்: 
சரியான எக்ஸ்ஃபாலியேட்டிங் மூலம் உங்கள் தோலில் இருந்து இறந்த செல்களை அகற்றவும். இது உடனடியாக முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.

லிப் பால்ம்: 
குளிர்காலம் உங்கள் உதடுகளை உலர்த்தும். மென்மையான உதடுக்கு எப்போதும் உங்கள் பையில் லிப் பாம் வைத்திருங்கள்.

கை மற்றும் கால்கள்: 
குளிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களில்’ இறந்த தோல் பொதுவானது. எப்பொழுதும் உங்களுடன் ஒரு நல்ல ஹேண்ட் க்ரீமை எடுத்துச் செல்லுங்கள், மேலும் ஈரப்பதத்தை அப்படியே வைத்திருக்க படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஃபுட் க்ரீமைத் தடவவும்,” என்கிறார் ஆதிகாரி.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!