நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இணையத்தை கலக்கும் கொரோனா வடை ரெசிபி; ட்ரை பண்றீங்களா?

 கொரோனாவால் வீட்டில் முடங்கி இருப்பவர்கள் பொழுதைப் போக்க வித விதமான உணவுகளை சமைத்துச் சாப்பிட்டு வரும் நிலையில், சமூகவலைதளத்தில் ஒருவர் கொரோனா வடிவில் சமைத்த வடையின் ரெசிபி வீடியோ வைரலாகி வருகிறது.


டந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வந்தாலும், வீட்டில் இருப்போரின் படைப்பாற்றலுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

பொழுதைப் போக்க வித விதமாகச் சமைத்துச் சாப்பிட்டு வரும் நிலையில், சமூகவலைதளத்தில் ஒருவர் கொரோனா வடிவில் சமைத்த வடையின் ரெசிபி வீடியோவை பகிர்ந்துள்ளது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

அந்த வீடியோவில், முதலில் அரிசி மாவு, சீரகம் , உப்பை சேர்த்து ஒரு மாவு கலவையை உருவாக்குகிறார். அதில், சிறு துளி ஹாட் வாட்டரை சேர்த்து நன்கு பிசைகிறார்.

இதற்கிடையில், வடைக்கான ஸ்டஃபிங் பிராசஸை தொடங்கிறார். உருளைக்கிழங்கு, வெங்காயம், துருவிய கேரட், கேப்சிகம், கறிவேப்பிலை மற்றும் சில அடிப்படை மசாலாக்களை சேர்த்து கடாயில் நன்கு வதக்கிறார். பின்னர், அந்த மசாலாவை உருண்டையாக உருட்டுகிறார்.

தொடர்ந்து, மாவை தட்டையாக்கி, அதன் மீது மசாலா உருண்டையை நடுவில் வைத்து, மொத்தமாக உருட்டிக்கொள்ள வேண்டும். தற்போது, அந்த உருண்டையை கொரோனா வடிவில் மாற்றும் பிராசஸை கண்டு இணையவாசிகள் வியப்படைந்தனர்.

தனியாக அரை கப் அரசியை ஒரு மணி நேரம் வாட்டரில் ஊறவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, ஊறவைத்த அரிசியை அந்த உருண்டை மீது தேய்கிறார்.

இதையடுத்து, அரிசி தேய்த்த உருண்டையை, பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைக்கப்படுகிறது. அவ்வளவு தான், பாத்திரத்தை ஓப்பன் செய்தால், கொரோனா வடிவலான வடையை காணமுடிகிறது.

இந்த கொரோனா வடையின் ரெசிபி வீடியோவை, ட்விட்டர் பயனாளர் மிம்பி என்பவர் ஷேர் செய்துள்ளார். வீடியோவை பகிரும் பலரும், இந்த கொரோனாவை கண்டு தங்களுக்கு பயமில்லை என பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தோற்று ஆரம்ப காலம் முதலே, பல வகையான உணவு காம்பினேஷன்களை இணையத்தில் பார்த்து வருகிறோம். மேற்கு வங்க இனிப்புக் கடையின் கொரோனா மிஸ்டி முதல் வியட்நாம் சமையல்காரரின் கொரோனா பர்கர் வரையிலான உணவுகளும், இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.



ALSO READ : சிக்கனுடன் இதை சமைத்து சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!