நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிக்கனுடன் இதை சமைத்து சாப்பிட்டால் கொரோனா குணமாகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

 சிக்கனில் இருமல் மருந்தை கலந்து சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்கின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.


லக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒன்று தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மறந்து புதிய வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர்.

உலகில் உள்ள‌ பல விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க தீவிரமாக போராடி வருகின்றனர். அந்த வகையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா வராமல் தடுக்க மக்கள் கசாயங்களைப் போட்டு குடித்து வருகின்றனர். வெளிநாடுகளிலும் இதுபோன்ற விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான உணவு தான் தற்போது டிக்டாக்கில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் சிக்கனில் இருமல் டானிக்கை ஊற்றி சமைத்து சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கின்றது. ஆனால் இதை பார்த்த டாக்டர்கள் பலரும் யாரும் இதை வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.


இருமல் மருந்து சேர்த்து சிக்கனை சமைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.  அது மட்டும் இல்லாமல் இருமல் மருந்தை சிக்கனில் ஊற்றி சமைப்பதால் உயிருக்கு ஆபத்தாக மாற கூடிய வாய்ப்பு உள்ளது.



ALSO READ : 125 நாகப்பாம்புகளுக்கு இடையில் கிடந்த நபர்! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!