நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே பனைமரத்தில் 16 கிளைகள்... ஊர் மக்களை வாயடைக்க வைத்த அதிசயம்!

 உலகில் பலவிதமான அதிசயங்கள் அன்றாடம் நடைபெறுவது உண்டு. ஆனால், இதில் பார்க்கபோகிற அதிசயம் ஊர் மக்களை வியக்க வைத்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சேர்ந்த கல்யாணபுரம் கிராமத்தில் உள்ள விவசாய மரத்தில் 2 பனை மரங்கள் உள்ளது. மொத்தம் 3 பனை மரங்கள் இருந்த நிலையில் ஒன்று அழிந்துபோனது.

இதனிடையே தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் உள்ளன.

இந்த 16 கிளைகள் கொண்ட தனியொரு மரமே தோப்பு போன்று காட்சி அளிக்கிறது. இருந்தாலும் இந்த 3 மரங்களுமே இதுவரையில் காய் காய்த்தது இல்லை என்பது வேதனையான ஒன்று.

இந்த அதிசய பனை மரங்களில் இருந்து புதிய மரக்கன்றுகளை உருவாக்க முடியவில்லையே என்பது கிராமத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது.    



ALSO READ : உலகிலேயே யாருமே கேள்விப்படாத விசித்திரமான காப்பீட்டு கோரிக்கைகள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!