நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

'இது என்னோட ஏரியா'; அன்னப் பறவையின் அட்டகாசம்..!!!

 பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம்.


மூக வலைதள உலகில் வேடிக்கைக்கும், சந்தோஷத்திற்கும், வியப்பிற்கும் பஞ்சமே இல்லை. தினம் தினம் பலர்  வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு சமூக ஊடக பயனர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்கள். 

மகிழ்ச்சியாக இருப்பதையும், சிரிப்பதையும் யார் தான் விரும்ப மாட்டேர்கள். இந்த ஒரு ஒரு சிறிய வீடியோ கிளிப்பைப் பார்த்தால்,  சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த வேடிக்கையான வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகின்றன. அப்படி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனியாக பிரித்து எடுக்கும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என புராண நூல்களில் கூறப்பட்டுள்ளதை நாம் அனைவரும் படித்திருப்போம். இந்த வைரல் வீடியோவில் அன்னம் ஒரு சிறுவனை தாக்கும் வேடிக்கையான  விடியோவில் காணலாம். 

திடீரென தண்ணீரில் குதித்த சிறுவனைப் பார்த்ததும் ஏனோ அந்த அன்னப்பறவைக்கு பிடிக்க வில்லை. அது தனது ஏரியா இவன் எப்படி வரலாம என நினைத்ததோ, அல்லது அவனை சீண்டி பார்க்கலாம் என நினைத்ததோ என்னவோ... அது பாயந்து வந்து செய்த செயலை பார்த்தால், வயிறு குலுங்க சிரிப்பீர்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

வைரலாகி வரும் இந்த வேடிக்கையான வீடியோவில், அன்னம் ஒன்று தண்ணீரில் ஒய்யாரமாக நீந்துவதைக் காணலாம். அப்போது ஒரு சிறுவன் ஓடி வந்து குதிக்கிறான். சிறுவனின் இந்த செயலால் எரிச்சல் அடைந்த அன்னம் அவனை துரத்துகிறது. அன்னம் தன்னை நோக்கி வருவதைக் கண்டு சிறுவனும் வேகமாக தண்ணீரை விட்டு வெளியேற முயற்சிக்கிறான். ஆனால் அன்னப்பறவை  அவனைப் விடுவதாக இல்லை. சிறுவனின் ஆடையை பிடித்து இழுக்கிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

 

இந்த வேடிக்கையான வீடியோ வைரலானது. அன்னம் மற்றும் சிறுவனின் இந்த வீடியோ biltekpluss என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. அன்னம் செய்த செயலை பார்த்து செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டதை வீடியோவில் காணலாம். வீடியோ மில்லியன் கணக்கான வ்யூஸ்களையும் லைக்குகளையும். பெற்றுள்ளது.


ALSO READ : சாலையில் வெடித்து சிதறிய 50 டன் எடையுள்ள திமிங்கிலம்; எங்கும் ரத்த வெள்ளம்..!!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!