நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வழுக்கைத் தலையிலும் முடி வளரனுமா? அப்ப இந்த வழிகளில் ஒன்றை பின்பற்றி பாருங்கள்!

 பொதுவாக ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை.

யோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதனால் பலரும் மன உளைச்சலுடன் காணப்படுகிறார்கள்.

மரபணு காரணங்களால் பரம்பரையாகச் சிலருக்கு முடி உதிர்தல், வழுக்கை ஏற்படுகிறது.

இதனை ஆரம்பத்திலே ஒரு சில இயற்கை வழிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். தற்போது அவை என்னென் என்பதை தெரிந்து கொள்வோம்.


  • வெங்காயத்தை வெட்டி, அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவற்றையும் அழிக்கும்.

  • விளக்கெண்ணெயை விரலால் தொட்டு, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி வேகமாக வளர ஊக்குவிக்கும்.

  • கற்றாஜை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இது முடியின் வேரில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறக்கும்.

  • இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலசி வந்தால், அது முடியின் வளர்ச்சிக்கு உதவும். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  • வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் முடி இல்லாத இடத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும்.

  • வழுக்கையைப் போக்க எலுமிச்சை சாற்றினை எந்த எண்ணெயுடனும் சேர்த்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து தலைமுடியை அலசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

  • மருதாணி இலைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும், அந்த இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் அதிக பலன் கிடைக்கும்.

  • தயிரை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனைப் பெறலாம். இது தவிர, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, வழுக்கையை நீக்குவதிலும் பெரிதம் உதவி புரிகிறது.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!