நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முதலைக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கும் ஜெண்டில்மேன்! வைரலாகும் வீடியோ

 காதலனைப் போல தழுவும் முதலையை, தள்ளி விடாமல், அதை அரவணைத்து கட்டிப்புரளும் நபரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்காதா?


  • கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கும் முதலை
  • நெகிழும் மனித அன்பர்
  • முதலையின் அன்பு வீடியோ


முதலையைப் பார்த்தாலே பயப்படுபவர்களுக்கு மத்தியில், முதலை கட்டிப் பிடித்தாலும் அதை கட்டிப்பிடி வைத்தியமாக நினைத்து அமைதி காக்க முடியுமா?

முடியும் என்பதுபோல உணர்த்தும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. தன்னை காதலனைப் போல தழுவும் முதலையை, தள்ளி விடாமல், அதை அரவணைத்து கட்டிப்புரளும் நபரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதா?

அந்த மனிதன் முதலைக்கு சிறிதும் பயப்படவில்லை என்பதை வீடியோவில் (Crocodile Video) பார்க்கலாம். முதலை மிகவும் கொடூரமான விலங்காக கருதப்பட்டாலும், அது பெரும்பாலும் தண்ணீரில் இருப்பதால் முதலைகளுடனான மனிதர்களின் தொடர்பு குறைவுதான். 

தற்செயலாக வெளியே வந்தாலும், சக்திவாய்ந்த முதலையின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால், சின்னாபின்னமாக வேண்டியது தான். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் கண்களையே நம்பமுடியவில்லை.   

மயிர் கூச்செறிய வைக்கும் வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றும்?

 

வீடியோவில், முதலை ஒன்று ஒருவரை ஆலிங்கனம் செய்துக் கொண்டிருக்கும் காட்சி, அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒன்றாக ஏற்படுத்துகிறது.

மிகவும் பெரிய அளவில் இருக்கும் முதலையை பார்த்தால் பிரமாண்டமாக இருக்கிறது.  முதலையின் வடிவத்தைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது.

ஆனால் அந்த முதலையின் நட்பான அரவணைப்பைப் பார்த்து சமூக வலைதளவாசிகள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.  

வைரலாகும் வீடியோவில் ஒரு மனிதன் தரையில் படுத்திருப்பதை காணலாம். ஊர்ந்து வரும் பிரம்மாண்டமான முதலை, அந்த நபரின் மேல் ஏறுகிறது. அந்த நபர் மிகவும் இயல்பாக முதலையைத் தழுவிக்கொண்டிருந்தார். அந்த மனிதன் முதலைக்கு சிறிதும் பயப்படவில்லை என்பதும் வீடியோவில் தெரிகிறது.  

jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ (Viral Video of Crocodile) பகிரப்பட்டுள்ளது. இதனுடன், பயனர், 'When Darth gator wants to be the BiG BOY and play' என்று எழுதியுள்ளார். வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நபரை பாராட்டுகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பற்றி ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த ஆக்கிரமிப்பு இன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்று எழுதினார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!