நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய டிக் டாக் வீடியோவில் கேலி, நகைச்சுவை மற்றும் கலை உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி வேறெதும் இருக்க வாய்ப்பில்லை..
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய டிக் டாக் வீடியோவில் கேலி, நகைச்சுவை மற்றும் கலை உணர்வுகளை வெளிப்படுத்துதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை தாண்டி வேறெதும் இருக்க வாய்ப்பில்லை என்று தான் நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட நபர் ஒருவர், அதன் மூலமாக மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்த கதை வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் கிரிஸ்வோல்டு. 25 வயதான இவர், டிக் டாக்கில் ரெகுலராக வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தனது திருமண வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் குறித்து அவ்வபோது டிக் டாக் வீடியோவில் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அலெக்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்றில், அவரது முதுகுப் பகுதியில் கட்டி ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் இருவர் அந்தக் கட்டி, தோல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகம் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அலெக்ஸை தொடர்பு கொண்டு அந்த ரசிகர்கள் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக தோல் நோய் சிகிச்சை நிபுணரை பார்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், அலெக்ஸ் இதை பெரிய விஷயமாக கண்டு கொள்ளவில்லை. இதை ஒரு சாதாரண பிரச்சினையாக கருதி, தன் வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார். ஒரு இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. ஆனால், அதற்கடுத்து, கட்டி பெரியதாக வளரத் தொடங்குவதையும், தனது ரசிகர்கள் சொன்ன அறிகுறிகள் தென்படுவதையும் அலெக்ஸ் உணர்ந்தார்.



இதையடுத்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றார் அலெக்ஸ். மருத்துவர்கள் அந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். கட்டியினை அகற்றியிருக்காவிட்டால், அது மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சிகிச்சையின்போது மற்றொரு கட்டி வளர்வதும் கண்டறியப்பட்டு, அதுவும் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கப்பட்டது.

இதுகுறித்து அலெக்ஸ் கூறுகையில், “எனக்கு டிக் டாக்கில் 10 லட்சத்திற்கும் குறைவான அளவில் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதில், பெரும்பாலும் யாரும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியதில்லை. ஆனால், ரசிகர்களில் இரண்டு பேர் தொடர்ச்சியாக என்னை எச்சரித்து வந்தனர். நான் அதைப் பற்றி கவலைப் படாமல் எனது வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டேன். நல்ல வேளையாக, அதற்குப் பிறகு சிகிச்சை எடுத்து குணமாகிவிட்டது.
ஒருவேளை கட்டி அகற்றப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை’’ என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சரும பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை அலெக்ஸ் வெளியிட்டு வருகிறார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!