நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எலுமிச்சை மரத்தில் காய்த்த அதிசய பழம்: ஆச்சரியமூட்டும் செய்தி

கர்நாடகாவில் 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சம் பழம் காய்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மைசூரு மாவட்டத்தின் பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சனோஜ், அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

இவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் எலுமிச்சை மரத்தை நட்டு வைத்து வளர்த்து வந்தார்.

அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது.
மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது, இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

சிலர் பழத்தை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.

தங்கள் வீட்டில் இருப்பது பாரசீக இன எலுமிச்சை மரம் என்றும், முதலில் சிறியதாக காய்த்தது நாளடைவில் வளர்ந்து பெரியதாக மாறிவிட்டது என சனோஜ் தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!