நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இறந்த கணவரின் சாம்பலை தினமும் சாப்பிடும் விநோதமான மனைவி

 இறந்து போன தன் கணவரின் உடலை எரித்த சாம்பலை சாப்பிடுவதாக ஒரு பெண் தெரிவித்த விசித்திர சம்பவம் இது...


காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதை உண்மையாக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆனால் ஒரு மனைவி இறந்த கணவனை நினைத்து செய்யும் செயல் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது.

இதை காதல் என்று சொல்வதா? இல்லை என்ன பெயரிடுவது என்றே விஷயத்தை கேள்விப்படும் அனைவரும் அதிர்ந்து போகின்றனர். 26 வயதான பெண் Caise, இறந்து போன தன் கணவரின் உடலை எரித்த சாம்பலை சாப்பிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த விநோத பெண்மணி இங்கிலாந்தை சேர்ந்தவர். அவருடைய கணவர் Sean ஆஸ்துமா பிரச்சனையால் உயிரிழந்தார்.

2009 ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஆனால், கணவர் இறந்த பிறகு, தான் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் கணவரின் சாம்பலை எடுத்துச் செல்லத் தொடங்கினார்.

"கணவரின் சாம்பலையே வாழ்க்கைத் துணையாக பாவித்து, மளிகைக் கடை, ஷாப்பிங், திரைப்படங்கள், ஹோட்டல் என எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதாக அவரே ஒப்புக் கொள்கிறார். 

சிலர் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், கேசி, தனது கணவரின் சாம்பலை சாப்பிடுகிறார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  

"என் கணவர் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை உணர்வதற்காக அவரை (சாம்பலை) என் விரல்களால் எடுத்து சுவைக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இவ்வாறு செய்கிறேன். என்னால் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை, நான் என் கணவரை சாப்பிடுகிறேன்" என்று கேசி கூறுகிறார்.

சாதாரண உணவைப் போல மனிதச் சாம்பலை உண்ண முடியாது, எனவே கேசி, கணவரின் சாம்பலை விரல்களில் கொஞ்சமாக எடுத்து, அதை வாயில் வைத்து சுவைக்கிறார்.  

இருப்பினும், சாம்பலின் சுவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் அது அழுகிய முட்டை போன்று துர்நாற்றம் வீசுவதாகவும் சொல்லும் கேசி, ஆனால் அது தனக்கு பழகிவிட்டதாகவும் இப்போது தான் அந்த சுவையை விரும்பத் தொடங்கிவிட்டதாகவும் கூறுகிறார்.   

சாம்பலின் சுவை பிடிக்கவில்லை என்றாலும், அதை சாப்பிடுவது அவருக்கு மகிழ்ச்சியையும் அட்ரினலின் (adrenaline) உணர்வையும் தருகிறது என்று அவர் கூறுகிறார். "நான் சாம்பல் இருக்கும் டப்பாவை திறக்கும்போது, எனக்கு ஒரு மகிழ்ச்சியான உணர்வு கிடைக்கிறது, அது எனக்கு மிகவும் தேவையாக இருக்கிறது, போதும் என்று தோன்றும் வரை சாம்பலை உண்கிறேன்" என்று கேசி கூறினார்.

மக்களின் விசித்திரமான போதை பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கேசி பங்கேற்று,  இறந்த கணவரின் சாம்பலை சாப்பிடும் தனது விசித்திரமான பழக்கத்தைப் பற்றி வெளிப்படையாக பொதுவெளியில் பகிர்ந்துக் கொண்டார்.  

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!