Posts

Showing posts from January, 2022

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவு நேரத்தில் எத்தகைய சரும பராமரிப்பு அவசியம் தேவை...

Image
  இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இருப்பது இல்லை. இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். மா ய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் என பகல் நேரத்தில் சருமத்தைப் பாதுகாப்பதற்காக, பல்வேறு வழிகளைக் கையாளுகிறோம். அதேசமயத்தில், இரவு நேர சரும பராமரிப்பைப் பற்றிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. மாசு, வெப்பம் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் இரவில் இருக்காது. எனவே இரவு நேர சரும பராமரிப்பு, சருமத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும், தூங்கி எழும்போது சருமம் புத்துணர்ச்சியோடு இருக்கும் என்பதால், இரவு நேரத்தில் சரும பராமரிப்பை அவசியம் பின்பற்ற வேண்டும். எத்தகைய சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளலாம் என இங்கு பார்க்கலாம்.   இரவு நேர சரும பராமரிப்பின் முதல் படி, முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை நீக்குவதுதான். எந்தவிதமான மேக்கப் போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, தண்ணீர் அல்லது மேக்கப் ரிமூவரைக் கொண்டு முகத்தை முழுவதுமாக துடைக்க வேண்டும். முகம் கழுவிய பின்பு, டோனர் பயன்படுத்துங்கள். பிறகு உங்கள் சரும மரு

வைரஸை எதிர்க்கும் அன்றாட உணவுப் பொருட்கள்

Image
 நாம் அவ்வப்போது உணவில் சேர்க்கும் சில பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. அவற்றை பற்றிய தொகுப்பு இதோ... ம ழையும், பனியும் மாறி மாறி வரும் இந்தக் காலநிலையில், நோய்கிருமிகளின் தொற்றும் அதிகரித்து வருகிறது. கொரோனா, டெங்கு என ‘வைரஸ்’ கிருமிகளின் மூலம் பரவும் நோய்கள் தீவிரம் அடையும்போது, அதில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமானது. நாம் பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தும் இஞ்சி, மிளகு, பூண்டு, மஞ்சள், வெங்காயம் போன்ற பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை என்பது அனைவரும் அறிந்தது. இவற்றைத்தவிர அவ்வப்போது உணவில் சேர்க்கும் சில பொருட்களும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.  அவற்றை பற்றிய தொகுப்பு இதோ... வைட்டமின் ‘சி’ - சிட்ரஸ் பழங்கள் மற்றும் கீரை வகைகள் திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, கீரை வகைகள் போன்றவற்றில் ‘வைட்டமின் சி’ அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி கூடும். பீட்டா கரோட்டின

’ரூ.3,200 கோடி பரிசு’ மெகா மில்லியனரை தேடும் லாட்டரி நிறுவனம்..!

Image
  அமெரிக்காவில் 3,200 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரை லாட்டரி நிறுவனம் தேடிக் கொண்டிருக்கிறது.  ஒரே லாட்டரியில் 3,200 கோடி ரூபாய் பரிசு அமெரிக்காவில் விழுந்த பம்பர் ஜாக்பாட் அதிர்ஷ்டசாலி யார்? என தெரியவில்லை. ’ஓவர் நைட்டில் ஓபாமா ஆகலாம் என்று பாக்குற’ என ஒருவரை கலாய்ப்பதற்காக பொதுவாக பலர் கூறுவதுண்டு. ஆனால், இந்த மாதிரியான வேடிக்கையான சொல்லாடல்கள் ஒரு சில எதிர்பாராத சமயங்களில் உண்மையாகவும் ஆகிவிடுவது தான் இந்த உலகில் வேடிக்கையான விஷயம். அப்படியான வேடிக்கையான சம்பவங்கள் அதிகமாக எதில் நடைபெறும்? என்றால் லாட்டரி. கூலித்தொழிலாளியாக இருப்பார், ஏதோ ஒருநாளில் 10 ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரே இரவில் லட்சாதிபதியாகிவிடுவார். கனவு மாதிரி தோன்றினாலும், உலகின் ஏதோ ஒரு மூலைகளில் இப்படியான சம்பவங்கள் தினம்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரே ஒரு லாட்டரியில் ஒருவருக்கு 3,200 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது, கேட்கும்போதே பலருக்கும் தலைச் சுற்றலாம். ஆனால் இது உண்மை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உட்லேண்ட் ஹில்ஸ் பிரிவில் இருக்கும் கேஸ் நிலையத்தில் அந்த லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இன

தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்

Image
  சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் வீடியோவில் காணப்பட்டது. அஸ்ஸாமில் மூன்று வயது சிறுமி யானையிடம் பால் குடிக்க முயலும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மனதைக் கவரும் காட்சியாக அமைந்துள்ளது. அந்த 3 வயது சிறுமி யானையை சுற்றி விளையாடுவதும், அதன் தும்பிக்கையை அணைத்து முத்தமிடுவதும் அந்த வீடியோவில் காணப்பட்டது. அதேபோல யானையும் தன் தும்பிக்கையை அந்த சிறுமியிடம் அசைத்து விளையாடுவதை காணலாம்.  இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது. அசாம் மாநிலம் (Assam Video) கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா (3). இவர் யானையுடன் விளையாடி பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் (Social Media) பரவி வருகிறது. சிறுமியிடம் யானையும் பாசத்தை பொழிந்து வருகிறது. அந்த யானையை ஹர்ஷிதா பினு என்று அழைக்கிறார். பினுவும் ஹர்ஷிதாவும் பாசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள். யானையின் கால்களுக்கு அடியில் ஓடி சென்று விளையாடுகிறார். இத்தனைக்கும் அந்த யானை அந்த சிறுமியை தாயுள்ளத்துடன் கவனித்துக் கொள்கிறது. வீடியோவை இங்கே காணலாம்:     அந்த வீடியோ

Google Search: கூகுளில் பெண்களின் 'TOP' தேடல்கள்..!!

Image
  இன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.  இளையத்தில் ஏதேனும் ஒன்றை ‘தேடிக்’ கொண்டே இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள். 2 கோடி பெண்கள் ஆன்லைனில் ஆக்டிவ் ஆக உள்ளனர். பெண்கள் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்கள். இ ன்றைய இளைஞர்கள் ஒரு நாளின் பாதி நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.  இளையத்தில் ஏதேனும் ஒன்றை ‘தேடிக்’ கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையான தகவல் வேண்டும் என்றாலும், நம்மை ஏமாற்றாமல் உடனடியாக கூகுள் நமக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது. அந்த வகையில், ஆண்களை விட பெண்களே அதிக நேரம் இணையத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யம் அளிக்கிறது அல்லாவா..  பெண்கள் அப்படி என்ன தான் கூகுளில் தேடுகிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை பொறுத்தவரை இதயத்தில் காதல் உணர்வு இருந்தால், பெண்கள் கூகுளைப் பயன்படுத்தி காதல் கவிதைகளைப் படிக்கவும் அல்லது அதைத் தங்கள் துணைக்கு அனுப்பவும் செய்கிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தவிர உடல் பருமன் குறைப்பது குறித்த டிப்ஸை தேடுகிறார்கள்.

ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா; அதனை டிராக் செய்ய சில எளிய டிப்ஸ்..!!

Image
  ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் செய்யவேண்டியவை ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள தொலைபேசியையும் டிராக் செய்ய முடியும் iOS மற்றும் Android சாதனங்களுக்கான சில டிப்ஸ். இ ன்றைய காலக்கட்டத்தில், நாம் அனைவரும் பல அன்றாட விஷயங்களுக்கு கூட, ஸ்மார்ட்போன்களை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நம் உலகம் நின்றுவிடும் என்பது போன்ற சூழ்நிலையில், உங்கள் தொலைந்த ஸ்மார்ட்ஃபோனை எளிதாக டிராக் செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம். உங்கள் ஃபோனை  தொலைத்துவிட்டால், முதலில் உங்கள் ஃபோன் எண்ணை அழைக்க உடனே முயற்சிக்கவும், உங்கள் நேரம் சரியாக இருந்தால், அருகிலேயே உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் தொலைந்து போன போனை ஒரு நல்ல நபர் கையில் கிடைத்திருந்தால், ஃபோனை கால் செய்வதன் மூலம், அது மீண்டும் உங்கள் கைகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் உங்கள் மொபைலில் பாஸ்வேர்ட் வைத்திருப்பது நல்லது. இதனா

Sharp Memory: மறதி அதிகம் இருக்கிறதா; இந்த ‘3’ எளிய பயிற்சிகளை ட்ரை பண்ணுங்க..!!

Image
  தற்போதையை வாழ்க்கை முறை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடற்பயிற்சி மூளை நினைவாற்றலை பெருக்கும். தற்போதையை வாழ்க்கை முறை காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. நினைவாற்றலை அதிகரிக்க உதவும் ‘ மூளை ஜிம் பயிற்சிகள்’. த ற்போதையை வாழ்க்கை முறை மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக மறதி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது.  பலருக்கு சிறிய விஷயங்களை நினைவில் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும் ‘ மூளை ஜிம் பயிற்சிகள்’ பெரிதும் உதவும்.  இந்த எளிய உடற்பயிற்சிகள், மூளையின் திறனை மேம்படுத்துவதால், இவை மூளை ஜிம் பயிற்சிகள் எனப்படுகின்றன. மூளைப் பயிற்சிகளின் உதவியுடன், மறதியை சில நாட்களிலேயே குணப்படுத்த முடியும். உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும் மூன்று எளிய பயிற்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 1. குறுக்கு பயிற்சிகள் (Cross Crawl) முதலில்,  உங்கள் கால்களை சிறிது பரப்பிக் கொண்டு நேராக நிற்கவும். உங்கள் தோள்களும் மார்புகளும் நேரான நிலைய

எப்போதும் அழகா இருக்க சிம்பிள் டிப்ஸ்! முயற்சி செய்தா நீஙகளே எவர்கிரீன் ஹீரோ

Image
  80% உணவு 20% உடற்பயிற்சி என்பதே அழகுக்கும் ஆரோக்கியத்திற்குமான தாரக மந்திரம்... ஆரோக்கியத்திற்கான அருமருந்து உடற்பயிற்சியும் உணவும் அழகுக்கு அஸ்திவாரமாகும் உணவுகள் ந ல்ல உடல் தோற்றத்துடன் இருக்க சிறந்த வழிமுறைகள் என பலவிதமான பரிந்துரைகள் தினசரி உங்களுக்கு கிடைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமான தாரக மந்திரம் இது... அதிலும், ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் காலத்தில், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. 80% உணவு 20% உடற்பயிற்சி என்பதே அழகுக்கும் ஆரோக்கியத்திற்குமான தாரக மந்திரம். அதிலும் குறிப்பாக, சருமப்பொலிவுக்கும், உடலின் கழிவுகள் நீங்கவும் அதிக நீர் அருந்தவேண்டும்.  தண்ணீரைவிட வெந்நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்த்தை மேம்படுத்தும். சாப்பிட்டதும் பத்து நிமிடம் கழித்து வெந்நீர் அருந்துவதால், உடலில் கெட்ட கொழுப்பு படிவதை தடுக்கும். உணவில் காய்கள், கீரைகள், பழக்கள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரப்படி உணவு அருந்துவது நல்லது. பிறகு உடற்பயிற்சி, ஒருவரின் ஆரோக்கியத்திற்கு, தோற்றப் பொலிவுக்கும் அடிப்படையானது. நடை, ஓட்டம்,

ஜோடி சேர்ந்து லூட்டியடிக்கும் வாத்து... புதுமையான ஸ்டைலில் அரங்கேறிய சம்பவம்! சினிமாவையும் மிஞ்சிய காட்சி

Image
  வாத்துகள் செய்யும் சேட்டை அழகாக படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அ ந்த வீடியோவில், தண்ணீரில் நீந்திச் செல்லும் வாத்து ஒன்று தலையை மடக்கி, போக்கு காட்டுகிறது. இது என்ன புதுமையான ஸ்டைலில் வாத்து தலையை மடக்கி வைக்கிறது என நினைப்பீர்கள். பின்னர் தண்ணீருக்குள் மூழ்கி எழும் வாத்துடன், இன்னொரு வாத்தும் சேர்ந்து கொள்கிறது. மகிழ்ச்சியான எண்ண ஓட்டத்தில் இருக்கும் இரண்டு வாத்துகளும் ஜோடி சேர்ந்து அழகான நடனத்தை அரங்கேற்றுகின்றன. தண்ணீரில் மிந்தது கொண்டு, கழுத்துகளை மடக்கியவாறு நீர்மேல் குதித்து குதித்து செய்யும் சேட்டை காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. '  ALSO READ :  உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி கின்னஸ் சாதனை.......

WhatsApp இல் உடனே இதை செய்யுங்கள்.... இல்லை ஆபத்து?

Image
  வாட்ஸ்அப் பில் பரிசோதனை செய்யப்படும் அம்சங்களை பற்றி துல்லியமான தகவல்களை பகிரும் வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, வாட்ஸ்அப் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை டெஸ்க்டாப் மற்றும் வெப் வெர்ஷன்களின் எதிர்கால அப்டேட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இ து தொடர்பாக வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் ஆனது, வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் அம்சத்தை இயக்கும் மற்றும் முடக்கும் விருப்பத்தை காண முடிகிறது. இந்த WhatsApp 2-Step அம்சம் வாட்ஸ்அப் மொபைல் ஆப் வெர்ஷனில் ஏற்கனவே உள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை செய்யவில்லை என்றால் உடனே செய்து வைத்து கொள்ளுங்கள். அதற்கு பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.   2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை இயக்குவது எப்படி? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பை திறக்கவும். பின்னர் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் நுழையவும். இப்போது அக்கவுண்ட் > 2-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் > எனேபிள் என்பதை கிளிக் செய்யவும். பிறகு உங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க 'பின்'னை (PIN)

உங்கள் முகத்தை இரண்டு மடங்கு கலராக மாற்ற வேண்டுமா? அப்போ இனி இந்த பழத்தோட தோலை தூக்கி வீசிடாதீங்க!

Image
  பொதுவாக பழங்கள் நம்முடைய உடலுக்கும் சருமத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் வாரி வழங்குகின்றது. அதனால் தான் நம்முடைய உணவில் பொதுவாக பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அ திலும் பழங்களை சாப்பிடுவதனால் எவ்வளவு நன்மைகள் நமக்கு உருவாகின்றதோ அதே அளவுக்கு மட்டுமல்ல, அதைவிட அதிகமான சத்துக்கள் பழங்களின் தோல்களில் உண்டு.  நாம் வேண்டாம் என்று தூக்கி ஏறியும் பழத்தோல் சருமத்துக்கும் தலைமுடிக்கும் நிறைந்த நன்மைகளைத் தரும். பல நன்மைகள் தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். வாழைப்பழத் தோலை  வைத்து, 5 நிமிடங்கள் வரை, தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அதைக் கழுவிவிட வேண்டும். ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து, இதைச் செய்து வந்தால் விரைவிலேயே அடிபட்ட காயங்கள், தழும்புகள் மறையும். வெயிலில்  எலுமிச்சைத் தோலை  நன்கு உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதை உங்களுடைய பேஸ் பேக்குகளிலோ அல்லது குளிக்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சைத் தோலில் அதிக அளவில் அமிலம் இருப்பதால் சருமத்துக்குக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் முக

வறண்ட சருமம் பொலிவடைய செய்யனுமா? இதோ சில அழகு குறிப்புகள் !

Image
  பெரும்பாலான பெண்களுக்கு வறண்ட சருமம் என்பது மன உளைச்சலைத் தரக்கூடியது. ஏ னெனில் எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும் அதற்கு என்ன தான் கிறீம்களை கொண்டு பூசினாலும் நிரந்த தீர்வினை தராது. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னெ்ன என்பதை பார்ப்போம்.   அரிசி மாவுடன், வெள்ளரிச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலர வைத்து பின்பு கழுவினால், வறண்ட சருமத்திலிருந்து விடுதலை கிடைக்கும். தயிரை நன்கு கலக்கி அதனுடன் உருளைக்கிழங்கை அரைத்துப் பிழிந்து சாறாக்கிக் கலந்து கொள்ளவேண்டும். இதனை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தைக் கொஞ்சம் சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம். அப்படிச் செய்தால் வறட்சி நீங்கும். பச்சை முட்டையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதனுடன் தேனைக் கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பின்பு நன்கு சோப்பு போட்டுக் கழுவி

கோபத்தை அதிகம் வரவழைக்கும் உணவுகள் இவைதான்! இனி சாப்பிடுவதை குறையுங்கள்

Image
  மனிதனுக்கு பல்வேறு விதமான உணர்ச்சிகள் உள்ளது, அதில் முக்கியமானது தான் கோபம். கோபம் அதிகமாக வருவதற்கு குணாதிசயம் ஒன்று காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில் ஒருவரது கோபத்தை சில வகை உணவுகள் அதிகமாக தூண்டும். அது போன்ற உணவுகளை குறைத்து கொள்வது நலம் பெயர்க்கும். தக்காளி வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாக தக்காளி கருதப்படுகிறது. ஏனெனில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால், அது கோபத்தை அதிகம் வரவழைக்கும். அதற்காக தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை, குறைவாக சாப்பிடுவது நல்லது. கத்திரிக்காய் ஒருவரது உடலில் இருக்கும் பித்த அளவில் இடையூறை ஏற்படுத்தும் மற்றொரு உணவுப் பொருள் தான் கத்திரிக்காய். அதே சமயம் இது கோபத்தையும் அதிகம் வரவழைக்கும் உணவுப் பொருளும் கூட. இதற்கு கத்திரிக்காயில் அசிடிட்டி அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம். பொரிக்கப்பட்ட உணவுகள் உடலின் ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட உணர்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதில் கல்லீரல் கோபத்தையும், நுரையீரல் சோகத்தையும், இதயம் மன இறுக்கம்/தூக்கமின்மையுடனும், சிறுநீரகம் பயத்

சாட் டிரான்ஸ்பர் அம்சத்தை எளிமையாக்கும் புது வாட்ஸ்ப் அப்டேட்

Image
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும

Google Search அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்

Image
  உலகளவில் கூகுள் தேடல் (Google search) தினமும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பொ ழுதுபோக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, பல்வேறு துறைகளில் தெரியாத தகவல்களை தெரிந்து கொள்வது என பல விடயங்களுக்கு இது பயன்படுகிறது.  கூகுள் தேடல் முடிவுகளை சரியாகப் பெறுவது எப்படி? asterisks நட்சத்திர குறியீடு எனப்படும் asterisks நமக்கு தெரியாத அல்லது பரிட்சியம் இல்லாத வார்த்தைகளை தேடும் போது பயன்படுத்தப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு, இரண்டாம் உலக போரின் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர் வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர்-தேடல்சிலைக் கண்டுபிடிக்க, தேடல் பாக்ஸில் “வின்ஸ்டன் * தேடல்சில்” என்று தேடலாம். Voice Search Google voice search-ஐ பயன்படுத்தியும் நமக்கு தேவையானவற்றை எளிதாக தேட முடியும். நீங்கள் குரோம் பிரவுசர் மூலம் பிரவுசிங் செய்யும் போது அல்லது Android அல்லது iOS-ல் Google ஆப்ஸை பயன்படுத்தினால், மேல் வலது மூலையில் இருக்கும் மைக்ரோஃபோன் ஐகானை கிளிக் செய்து, நீங்கள் தேட விரும்புவதை குரல் மூலம் கூறலாம்.   specific sites தேவையில்லாத ரிசல்ட்களை தவிர்க்க குறிப்பிட்ட சைட்களை மட்டுமே தேடலாம

உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி கின்னஸ் சாதனை.......

Image
  ஈரானின் AKraj என்ற பகுதியை சேர்ந்த Abolfazl Saber Mokhtari என்பவர், உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இ துகுறித்து Mokhtari(50) கூறுகையில், சிறுவயது முதலே தனது உடலில் ஸ்பூன்களை சமநிலை செய்து வந்தேன். அதன் தொடர் பயிற்சியின் விளைவாக இன்று இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளேன். மேலும் தனது உடம்பில் எந்த ஒரு பொருளையும் சமநிலை செய்யும் சக்தி இருப்பதாகவும், பிளாஸ்டிக், கிளாஸ்,ஸ்டோன், வுட் போன்ற எதுவாக இருந்தாலும் சமநிலை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். தனது உடலின் ஆற்றலை தன் மேல் உள்ள பொருள்களின் மீது தான் திசை திரும்புகிறேன். அதனால் அந்த பொருள்களை என்னால் தொடவும் உணரவும் முடிகிறது. இதுவே நான் இன்று இந்த கின்னஸ் சாதனை படைக்க முதற்காரணம் என தெரிவித்துள்ளார். Mokhtari(50) இந்த சாதனையை செய்வதற்கு முன்பு ஸ்பெயின் சேர்ந்த Marcos Ruiz Ceballos என்பவர் தனது உடலில் 64 ஸ்பூன்களை சமநிலை செய்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ALSO READ :  1000 பேரை மயக்கிய குட்டி தேவதையின் அழகிய ரியாக்‌ஷன்! கோடி கொடுத்தாலும் கிடைக்காத வரம்...

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு டீ போதும்

Image
  பொதுவாக ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இ தில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் காணப்படுகிறன. இதில் தினமும் டீ போட்டு குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகின்றது. தற்போது அதில் எப்படி டீ தயாரிக்கலாம்? இதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். தேவைப்படும் பொருட்கள் தண்ணீர் - 4 கப் கிரீன் டீ பைகள் - 3 தேங்காய்பால் - கால் கப் கிரீம் பால் - 2 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை -1 தேக்கரண்டி செய்முறை தேங்காய் பால் கிரீன் டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு, மூன்று கிரீன் டீ பைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் 1/4 கப் தேங்காய் பால் மற்றும் 2 டீஸ்பூன் கிரீம் பாலை சேர்த்து நன்றாகக் குலுக்கி விட்டு, பின் கிரீன் டீ பையை அகற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தால், நீங்கள் அதில் ஒரு தேக்கரண்டி நா

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!