நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்! வெறும் 20 நிமிடத்தில் மொறு மொறு மெதுவடை ரெடி..

 மொறு மொறு மெதுவடை 20 நிமிடத்தில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும்.

இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என எதையும் ஊற வைத்து அரைக்க தேவையில்லை. வெறும் 30 நிமிடங்கள் போதும்.


மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்

  1. ரவை – 2 கப்
  2. தயிர் – 1 1/2 கப்
  3. உப்பு கொத்தமல்லி
  4. தழை – 2 டேபிள் ஸ்பூன்
  5. இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  6. பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது
  7. குக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் இரண்டு கப் ரவை சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் 1 கப் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். சரியான பதம் வரவில்லை என்றால் இன்னும் ஒரு அரை கப் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்த பிறகு, அலுமினிய பேப்பர் அல்லது ஒரு மூடியால் நன்கு மூடிக்கொள்ளவும்.

இவற்றை 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.

இதன்பின்னர் அவற்றுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், குக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.


மாவை வடை பதத்திற்கு தட்டி சேர்த்த பின்னர், எப்போதும் வடைக்கு மாவு பிடிப்பது போல் பிடித்து, தட்டி கொதிக்க வைத்துள்ள எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும். இதேபோன்று மீதமுள்ள மாவிலும் செய்து பொரித்து எடுக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ரவா மெதுவடை தயாராக இருக்கும்.



ALSO READ : ஆண்கள் தினமும் வேக வைத்த முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!