நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

’கற்களை காதலிக்கும் நீர்வீழ்ச்சி’ பிரம்மிக்க வைக்கும் இயற்கை - வைரல் வீடியோ

 கற்களை காதலிக்கும் நீர் வீழ்ச்சியின் பிரமிக்க வைக்கும் பேரழகு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  


இயற்கையின் காணக்கிடைக்காத பல அதியங்களை பொதிந்து இருக்கும் இடங்கள் இந்த பூமியில் ஏராளமாக உள்ளன. அந்த இடங்களை காணாமல் இந்த வாழ்வை நிறைவு செய்வது என்பது ஒருவகையில் நாம் பெற்ற சாபம் என்று கூட சொல்லாம். ஆம், இந்தமாதிரியான அழகான இடங்களை பார்க்கும்போது, இதனை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். அப்படியான அழகு.. இல்லை.. இல்லை - பேரழகு கொண்ட இடங்கள் இந்த பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இதற்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்து, அழகான இடங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இணையத்தில் பதிவிடுபவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அப்படி ஒருவர் பதிவிட்ட வீடியோ இணைய வாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  

முதன்முறையாக இந்த வீடியோவை பார்க்கும் யாரும், அசந்துபோவது நிச்சயம். வானுயர கற்பாறைகளின் மீது இசை வாசிப்பது போல் மெதுவாக உருண்டோடி வரும் நீரின் அழகை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது. இந்த வீடியோவில் அந்த காட்சி இடம்பெற்றிருக்கிறது. சுற்றிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தைக் கொண்ட கற்பாறைகள் சூழ்ந்திருக்கின்றன. வட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்த இடத்தின் நடுவே, வானத்தில் இருந்து வீழும் நீர்த்துளிகள் அருவியாய் கொட்டுகின்றன. அதெப்படி சாத்தியம்? தினமும் அந்த இடத்தில் மழை பொழிகிறதா? என நீங்கள் கேட்கலாம். 

ஆனால், அந்த இடத்தில் இருந்து நீங்கள் மேல்நோக்கி பார்க்கும்போது வானம் மட்டுமே உங்கள் கண்ணுக்கு தெரியும். தண்ணீர் அங்கிருந்து வருகிறது என்றுதான் நினைப்பீர்கள். சூழ்ந்திருகும் கற்பாறைகளின் நடுவே மெதுவாக தவழ்ந்து வரும் நீரின் காட்சியைக் காண நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும். இத்தகைய அழகான காட்சியைக் கொண்ட இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பார்த்து, ரசித்து மெய்சிலிர்த்துள்ளனர். 


ALSO READ : முதலைக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கும் ஜெண்டில்மேன்! வைரலாகும் வீடியோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!