நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெயில் காலத்திற்கு உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள சேப்பங்கிழங்கு மோர் குழம்பு..!

பலரும் இந்த ஸ்டைலை மறந்திருக்கக் கூடும். அந்த ருசியை பக்குவம் மாறாமல் நீங்கள் சுவைக்க ஆசைப்பட்டால் உங்களுக்கான ரெசிபி.
இந்த சேப்பங்கிழங்கு மோர் குழம்பு ஊர் பக்கங்களில் அதிகமாக செய்வதுண்டு. ஆனால் பலரும் இந்த ஸ்டைலை மறந்திருக்கக் கூடும். அந்த ருசியை பக்குவம் மாறாமல் நீங்கள் சுவைக்க ஆசைப்பட்டால் உங்களுக்கான ரெசிபி இதோ...


தேவையான பொருட்கள் :

மோர் - 1/2 லிட்டர்

சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

கடலை பருப்பு - 1 tbsp

பச்சரிசி - 1 tbsp

உப்பு - தே.அ

அரைக்க :

தேங்காய் துருவல் - 3 tbsp

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 4

மிளகு - 1 tsp

சீரகம் - 1 tsp

மஞ்சள் - 1/2 tsp

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp

கடுகு - 1 tsp

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - 1/4 tsp

பெருங்காயத்தூள் - 1/4 tsp

கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை :

முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

சேப்பங்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் தயிரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

இப்போது அரைத்த கடலை பருப்பு மற்றும் தேங்காய் துருவல் விழுது இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். வேக வைத்த சேப்பங்கிழங்கையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்துவிட்டு அடுப்பில் வையுங்கள்.

அடுப்பில் சிறு தீயில் ஒரு கொதி வர வேக வைத்து இறக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான் சேப்பங்கிழங்கு மோர் குழம்பு தயார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!