நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ராட்சத மூச்சுவிடும் பூமி தாய்.... இயற்கை மிஞ்சிய ஒரு அதிசயம் கடவுள் படைப்பில் இல்லை!

 கனடாவின் குயூபெக் பகுதியில் பூமி தாய் மூச்சு விடுவதை போல மரங்கள் ஆடும் காட்சி அனைவரையும் விழிபிதுங்க வைத்துள்ளது. 


பூமி மூச்சுவிடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

அந்த வீடியோவில், இயற்கை செழிப்பு நிறைந்த வனப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து இருக்கின்றன.

அந்த இடத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு மட்டும் மேல்நோக்கி எழுந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. முதன்முறையாக பார்க்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தவுடன் பூமி மூச்சுவிடுமா? என நிச்சயமாக யோசிப்பார்கள். ஆனால், அங்கு தான் டிவிஸ்ட் இருக்கிறது.  

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!