நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலையில் சுறுசுறுப்பாகஒரு தன்னம்பிக்கை பதிவு 👍

காலையில் 
சுறுசுறுப்பாக
ஒரு தன்னம்பிக்கை பதிவு 👍

தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!

1.எப்போதும் பின் வரிசையில் 
ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு 
வாருங்கள்.நிமிர்ந்து அமருங்கள்.

2.யாரைச் சந்தித்தாலும், 
தைரியமாக அவர்கள் கண்களை
பார்த்துப் பேசுங்கள். அவர் 
எப்பேர்ப்பட்ட பிரபலமாக 
இருந்தாலும், தலை கவிழ்ந்து 
தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3.நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்நடையில் 
தெரியும் அந்த சுறுசுறுப்பு, 
உற்சாகம் உங்கள் செயல் 
வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4.எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் 
பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள்.
அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5.எந்நேரமும் உதடுகளில் 
ஒரு புன்னகையை வைத்திருங்கள். 
அது தருகிற தன்னம்பிக்கை 
வேறு எங்கேயும் கிடைக்காது...

வாழ்க்கை இனியது.
நாம் எப்படி எதிர்கொள்கிறோம்
என்பதை பொறுத்தே எல்லாமும். 👍

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!