தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
நாசிக்கில் தங்கத்தால் செய்யப்பட்ட மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை - வைரல் புகைப்படம்!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தங்க மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம் எனவும் கூறியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் புதுவிதமான ஸ்வீட்ஸ்கள் விற்பனைக்கு வரும். அதில் சில வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவாரஸ்யமான ஸ்வீட் தான் நாசிக் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாசிக் நகரில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையில் விநாயகப் பெருமானின் விருப்பமான ஸ்வீட் வகையான மோதகத்தை ஒரு கிலோவுக்கு 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அப்படி இதில் என ஸ்பெஷல் என கேள்வி எழுகிறதா? இந்த மோதகத்தில் சாப்பிடக்கூடிய தங்கம் சேர்க்கப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு 21 மோதகங்கள் படைத்தது வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது இந்த ஸ்வீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கடை உரிமையாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சாகர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் தீபக் சவுத்ரி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 25 வகையான ஸ்வீட்ஸ்களை தங்கள் கடையில் தயார் செய்து விற்பனை செய்தததாகவும், அதில் இந்த தங்க மோதகம் மட்டுமின்றி, வெள்ளியால் செய்யப்பட்ட மோதகமும் அடங்கும் என கூறியுள்ளார். மேலும் தங்க மோதகம் ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டபோதிலும் ஏராளமானோர் அதனை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்க ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் தங்கத்தை விட இந்த ஸ்வீட்டுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னதாக சூரத்தில் விலை உயர்ந்த ஸ்வீட் தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் ரூ.9,000 என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளாதாக வீடியோ வெளியானது.
வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதத்தால் மூடப்பட்டுள்ளது. 22 கேரட் தங்க காகிதம் பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும், இந்த வடா பாவ் விலை ரூ. 2,000 என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனிடையே , ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயருக்கு படைக்கப்பட்ட 21 கிலோ லட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ .18.90 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் யாதவ், தெலுங்கானா தொழிலதிபர் மர்ரி ஷஷன் ரெட்டி இணைந்து இந்த பிரபலமான லட்டை வாங்கியுள்ளனர். இந்த ஏலத்தில் லட்டின் ஆரம்ப விலையானது ரூ.1,116க்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் பலத்த ஆரவாரங்களுக்கிடையில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டது.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment