நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயன்ற 71 வயது மூதாட்டி

 பெண்ணின் முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் என மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மும்பையின் வசாய் சாலை ரயில் நிலையத்தில் 71 வயது பெண்மணி தவறி விழுந்து பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சிக்கிக்கொண்ட கொடூரமான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இருப்பினும், அவரது கணவர் மற்றும் அங்கிருந்த பிற பயணிகளின் உதவியால் அந்த மூதாட்டி ரயிலின் கீழ் சிக்காமல் காப்பாற்றப்பட்டார்.

தெலங்கானாவில் ஹைதராபாத்தில் வசிக்கும் அந்த பெண், பாவ்நகர்-காக்கிநாடா சிறப்பு ரயிலில் ஏற முயன்றபோது, ​​கால் தவறி கீழே விழுந்து பிளாட்பாரம் இடைவெளியில் சிக்கிய சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், அவரது கணவர் உட்பட இரண்டு பயணிகள் கீழே விழுந்த அந்த மூதாட்டியை விரைந்து சென்று பாதுகாப்பாக இழுத்து ரயிலில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றுவதைக் காணலாம். சில நொடிகளுக்குப் பிறகு ரயில் நிறுத்தப்பட்டது.

அந்த பெண்ணின் முதுகு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார் என மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த ஒரு அசம்பாவிதத்தையும் தவிர்க்க, ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு இந்திய ரயில்வே அதிகாரிகள் மீண்டும் மீண்டும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த மூதாட்டியின் செயல்களை குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தது தவறு என விமர்சித்துள்ளனர். வேறு சிலர் அவளைக் காப்பாற்றிய பயணிகளைப் பாராட்டினார்கள். 

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த வீடியோவை உள்ளது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரயிலில் நிற்கும் போது மட்டுமே இறங்க வேண்டும் அல்லது ஏற வேண்டும். ஓடும் ரயில் ஏற முயற்சிக்காதீர்கள். தயவுசெய்து ரயிலேவே விதிகளுக்கு கீழ்ப்படியுங்கள்.

அதேபோல அனேகள் மாவட்டத்தை சேர்ந்த அவஹள்ளி ரயிலேவே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் மோதவுள்ளது என தெரிந்ததும் டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் கீழு குதித்து தப்பியோடினார்.

சுமார் 1380 பயணிகளுடன் கார்மேலராம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டிரக் மீது ரயில் மோதியது.

டிரக் காலியாக இருந்த நிலையில், ரயில் மோதிய வேகத்தில் டிரக் சுக்குநூறாக உடைந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, ரயில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்று ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.


ALSO READ : பள்ளி செல்ல பாய்ந்தோடும் ஆட்டுக்குட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!