தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஸ்கூட்டர் ஓட்டும் நாய், பூனை ... கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
நாய் மற்றும் பூனை இணைந்து விளையாட்டு ஸ்கூட்டரை ஓட்டும் வீடியோ, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. பூனையின் பெயர் சஷ்மி, பெங்கால் பூனையான சஷ்மிக்கு இப்போது 7வயதாகிறது.
மனிதர்களைப் போலவே விலங்குகளும் நம்ப முடியாத பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகின்றன. அந்த வீடியோக்களை பார்க்கும்போது, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்லும். அந்தமாதிரியான வீடியோ ஒன்றை கின்னஸ் சாதனை பக்கம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாயும், பூனையும் இணைந்து பல்வேறு சேட்டைகளை செய்கின்றன.
சுமார் 5 நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், பூனையுடன் இணைந்து நாய் பொம்மை ஸ்கூட்டரை நீண்ட தூரத்துக்கு ஓட்டிச் செல்கிறது. பின்னர், ஸ்கூட்டர் மீது பூனை இருக்கும்போது, நாய் அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறது. இது பார்ப்பவர்களுக்கு உண்மையா? என்று கூட தோன்றும். ஏனென்றால், நாயும், பூனையும் சேர்ந்திருப்பது என்பதே வியப்பின் உச்சம். அவை இரண்டும் இணைந்து ஒன்றாக ஸ்கூட்டர் ஓட்டுவது, மற்ற ஆக்டிவிட்டிகளை செய்வது என்றால், வியப்புக்கு சொல்லவா வேண்டும்.
பூனையின் பெயர் சஷ்மி, பெங்கால் பூனையான சஷ்மிக்கு இப்போது 7வயதாகிறது. பாஸ்டன் டெரியர் வகையைச் சேர்ந்த நாய் லாலி பாப்புக்கு 5 வயதாகிறது.
ஸ்கூட்டர் ஓட்டும் நாய், பூனை
இவை இரண்டும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றன. மெலிசா மில்லெட் என்பவர், லாலிப்பாப் மற்றும் சஷ்மியை வளர்த்து வருகிறார். இது குறித்து அவர் பேசும்போது, லாலி பாப்பும், சஷ்மியையும் நான் நீண்ட நாட்களாக வளர்த்து வருகிறேன், அவை நண்பர்களாக மாறுவார்கள் என கனவிலும் நினைக்கவில்லை. அவர்களுக்கு இடையிலான கெமிஸ்டிரி அந்தளவுக்கு ஒத்துப்போகிறது.
இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவதை பார்க்கும்போது மிகவும் ஆசையாக இருக்கும். எப்போது விளையாடினாலும், இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள் என்றும் மெலிசா மில்லெட் தெரிவித்தார். அவைகள் இரண்டுக்கும் இடையில் இருக்கும் அன்பைப் பார்த்தவுடன், ஸ்கூட்டர் ஒட்டவும், மற்ற விளையாட்டுகளில் சேர்ந்து விளையாடும் பயிற்சிகளைக் கொடுத்தேன்.
நான் எதிர்பார்த்தது போலவே இருவரும் அவ்வப்போது ஒன்றாக இணைந்து ஸ்கூட்டரில் சவாரி செல்வார்கள். நேரடியாக பார்த்த எனக்கு இது வியப்பாக தோன்றியதால் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். கின்னஸ் குழுவினரும் அந்த வீடியோவைப் பார்த்து, அங்கீகரித்து சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தனர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மெலிசா மில்லெட் தெரிவித்தார்.
இந்த வீடியோ இதுவரை சுமார் 21 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளையும், லைக்குகளையும் கடந்துள்ளது. கண்களை கவரும் நாய் மற்றும் பூனையின் சேட்டைக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், உலக விந்தையில் இதுவும் ஒன்று எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோக்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு விலங்கு மற்றும் மனிதர்கள் மீது நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கற்பிதங்கள் பொய் என நிரூபிக்கிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. பாம்புகளின் பெயரை கேட்டாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட பாம்பிற்கு அதுவும் கருநாகத்திற்கு தண்ணீர் காட்டுவது என்றால் சும்மாவா. இணையவாசிகளை உறைய வைக்கும் வைரல் வீடியோ உங்களுக்காக. திடீரென்று ஒரு பாம்பை, அதுவும் கருநாக பாம்பை பார்த்தால் என்ன நடக்கும்? நம்மைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி. வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்...
Comments
Post a Comment