நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இப்பதிவில் மிகவும் சத்தானபாசிப்பயறு சாலட் ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்....

 மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் கூறுவார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் எளிமையான தென்னிந்திய சாலட் ஆகும்.

இதில் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் தேங்காய் சேர்ப்பது கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது. இந்த சுவையான ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


முக்கிய பொருட்கள்

3/4 கப் பாசிப் பருப்பு

வெப்பநிலைக்கேற்ப

தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

பிரதான உணவு

தேவையான அளவு கறிவேப்பிலை

1 Numbers பச்சை மிளகாய்

1 Pinch பெருங்காயம்

1 தேக்கரண்டி கடுகு விதைகள்

தேவையான அளவு உப்பு

1/2 கப் துருவிய தேங்காய்

தேவையான அளவு கொத்தமல்லி இலை

1/2 Numbers எலுமிச்சை


Step 1:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

Step 2:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


Step 3:

பின்பு பாசிப்பருப்பில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.


Step 4:

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.


Step 5:

பாசிப்பருப்பு பச்சையாக சேர்க்கப்பட்டிருப்பதே கண்டுபிடிக்க முடியாது.






ALSO READ : சாப்பிட்ட பிறகு வாயு தொல்லையால் அவதியா? நிபுணர் பகிர்ந்த சிம்பிள் டிப்ஸ் இங்கே......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!