நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காலையில் உடலுக்கு சத்தான பிரெட் சப்பாத்தி - செய்வது எப்படி?

 சாப்பாத்தி என்றால் பலருக்கும் பிடிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


அந்த வகையில் பல வகையான சப்பாத்திகளை சாப்பிட்டு இருப்போம். இதில் பிரெட் சப்பாத்தி எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம். 


தேவையான பொருட்கள் 


பிரெட் துண்டுகள் - 10,

மைதா மாவு - 100 கிராம்,

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

பால் - 100 மில்லி,

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,

நெய் - 4 டீஸ்பூன். 

செய்முறை விளக்கம்


முதலில் பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.


இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இரு-புறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

தொடர்ந்து இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். இத்தோடு பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!