நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Dreams: உங்க கனவுல இதெல்லாம் வந்தா நீங்கதான் அடுத்த அம்பானி!!

 

கனவு சாஸ்திரத்தின் படி, உங்கள் கனவில் வெற்று பாத்திரங்களைக் கண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாகும். இந்த கனவு நீங்கள் வரும் நாட்களில் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. இந்த கனவுகள் உங்களை எதிர்கால நிகழ்வுகளை நோக்கி சுட்டிக்காட்டுகின்றன. சில கனவுகள் மோசமானவையாகவும், சில கனவுகள் நல்லவையாகவும் இருக்கின்றன. அதே சமயம், கனவு சாஸ்திரத்தின்படி, சில கனவுகள் நாம் பணக்காரர்களாகப் போவதைக் குறிக்கின்றன. எந்த கனவுகள் நாம் பணக்காரர் ஆகும் குறிப்பை நமக்கு அளிக்கின்றன என பார்க்கலாம்.

கனவில் எலி தோன்றுவது

கனவில் எலி தோன்றுவது நல்ல சகுனமாகக் கருதப்படுகின்றது. உங்கள் கனவில் எலியை  நீங்கள் கண்டால், உங்களுக்கு பண வரவு அதிகமாகப்போகிறது என பொருள். உங்கள் வாழ்க்கையின் வறுமை நீங்கும். உங்களுக்கு இப்படிப்பட்ட கனவு வந்தால், அதை உங்கள் வீட்டிலுள்ள இளைய குழந்தைக்கு சொல்லுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

காலி பாத்திரங்களைப் பார்ப்பது

கனவு சாஸ்திரத்தின் படி, உங்கள் கனவில்  வெற்று பாத்திரங்களைக் கண்டால், இது மிகவும் நல்ல அறிகுறியாகும். இந்த கனவு நீங்கள் வரும் நாட்களில் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது. இந்த கனவு நீங்கள் பணக்காரர் ஆகப்போவதையும் சுட்டிக்காட்டுகிறது.

கனவில் பசுக்களையும் பசு சாணத்தையும் காண்பது

கனவில் ஒரு நபர் பசுவையும்  பசுவின் சாணத்தையும் பார்த்தால், அவரது வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வறுமையை நீக்குவதோடு, இந்த கனவு வெற்றியின் வழியில் வரும் பிரச்சினைகளையும் நீக்குகிறது என்று நம்பப்படுகிறது. இப்படி ஒரு கனவு வந்தால் அதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது.

கனவில் விளக்குமாறைக் காண்பது

கனவில் விளக்குமாறு பார்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. விளக்குமாறு அற்புதத்தின் சின்னம் என்று கூறப்படுகிறது. உங்கள் கனவில் நீங்கள் விளக்குமாறைப் பார்த்தால், உங்கள் வீட்டிலிருந்து வறுமை விலகப்போகிறது என்றும் வீட்டில் பண வரவு அதிகரிக்கப்போகிறது என்றும் பொருள். இப்படிப்பட்ட கனவு கண்டால் அதை உங்கள் மனைவி அல்லது தாயிடம் சொல்லுங்கள்.

மின்னணு பொருட்கள் உடைவதைக் காண்பது

கனவு சாஸ்திரத்தின் படி, இந்த கனவு மிகவும் புனிதமானது. உங்கள் கனவில் மின்னணு பொருட்கள் உடைவதை நீங்கள் கண்டால், அது பண வரவின் அறிகுறியாகும். இருப்பினும், இந்த கனவைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. ஆனால் உங்கள் கனவில் மின்னணு பொருட்களைப் பார்த்தால், அது வாழ்க்கையில் வறுமையின் வரவைக் குறிக்கிறது.

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!