நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Football Legend மரடோனாவுக்கு ஆறடி கேக் சிலை அமைத்த தமிழக பேக்கரி

 

கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு (Diego Maradona) தமிழகம் வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu)  ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.  


கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு (Diego Maradona) தமிழகம் வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu)  ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.  

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேக்கரி, கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் (Diego Maradona) அளவிலான கேக் சிலையை உருவாக்கி, மறைந்த அர்ஜென்டினா வீரரை கெளரவிக்கும் சாதனை செய்துள்ளது. இந்த சாதனை நான்கு நாட்களில் செய்யப்பட்டுள்ளது.

பேக்கரியின் ஊழியர் சதீஷ் ரங்கநாதன் (Satish Ranganathan) செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் இந்த சாதனையைப் பற்றி பேசினார். “ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் (christmas) மற்றும் புத்தாண்டு (New Year) கொண்டாட்டங்களின் போது, பிரபலங்களின் கேக் சிலைகளை உருவாக்கி அவற்றை பொதும்க்களின் பார்வைக்கு வைப்போம். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் இளையராஜா, அப்துல் கலாம், பாரதியார் என பலருக்கு கேக் சிலைகளை வைத்திருக்கிறோம்” என்று பேக்கரி பணியாளர் தெரிவித்தார்.

"கடந்த மாதம் இறந்த கால்பந்து வீரர் மரடோனாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக மட்டும் இந்த கேக் (Cake) சிலையை நாங்கள் உருவாக்கவில்லை. இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடுவதற்கு பதிலாக களத்தில் இறங்கி உண்மையில் விளையாடுவதை வலியுறுத்துவதற்கும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். விளையாடுவதால் உடல் ஆரோக்கியம் மற்றும் மன நலம் மேம்படும்” என்று பேக்கரி ஊழியர் கூறுகிறார்.

அர்ஜென்டினாவின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்த மரடோனா தனது முயற்சியால் கால்பந்தில் பிரகாசித்தார் என்பதை சுட்டிக் காட்டும் சதீஷ் ரங்கநாதன், இந்திய வீரர் டெண்டுல்கர் (Tendulkar) கிரிக்கெட்டுக்காகவும், 100 மீட்டர் ஓட்டத்திற்கு உசேன் போல்ட் (Usain Bolt) மற்றும் குத்துச்சண்டைக்கு மைக் டைசன் (Mike Tyson) நினைவுகூரப்பட்டதைப் போலவே மரடோனா கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பேக்கரியில் பணிபுரியும் சதீஷ் கூறுகிறார்.
1986 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்கு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையை வெல்ல உதவிய மரடோனா, தனது 60வது வயதில் நவம்பர் 25 அன்று புவெனஸ் அயர்ஸ்-இல் (Buenos Aires) புறநகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் இறந்தார்.  அவரது மூளையில் ஒரு உறைந்திருந்த ரத்தத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்த ஒரு மாதத்திற்குள் அவர் காலமானார்.

Comments

Popular posts from this blog