நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நமது உடல் ஆரோக்கியத்தை நாசமாக்கும் உணவுப் பொருட்கள்! விஷமாக மாறும் சுவை...........

 நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இளம்தலைமுறையினருக்கு கூட இதயநோய், புற்றுநோய் எல்லாம் ஏற்படுகிறது.

இதற்கு காரணம் நமது தவறான உணவுப்பழக்கம் தான். நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே நல்லது என்று நினைக்க வேண்டாம்.

அதிலும் அன்றாடம் நாம் உணவில் சேர்க்கும் சில பொருட்கள், அந்த உணவை நஞ்சாக்கி, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.

வறுத்த உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதோடு, எண்ணெயை அளவுக்கு அதிகமாக சூடேற்றுவதால், அந்த எண்ணெயில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் உருவாகி, புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். ஆகவே அளவுக்கு அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

சர்க்கரையில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவு. சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளும் போது, அது சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

சீஸ், வெண்ணெய் போன்றவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்தால், அதில் உள்ள ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்கி, உடல் பருமனை உண்டாக்கி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

தாகத்தைத் தணிப்பதற்காக சோடா பானங்கள் அல்லது பழச்சாறுகளை வாங்கிப் பருகுவோம். ஆனால் இதில் சர்க்கரையும், கார்பன்-டை-ஆக்ஸைடு தான் உள்ளது. மேலும் இவற்றில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. இதற்கு பதிலாக பழங்களாக சாப்பிடலாம்.

பாலில் அதிகமாக நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் எனில் இது உங்களுக்கு உகந்த உணவு இல்லை. கல்லீரல் பாதிப்பை குறைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் முழு பால் உண்ணலை மாற்றி அமைக்கலாம்.

இதற்காக நீங்கள் குறைந்த கொழுப்புள்ள பாலை தேர்வு செய்யலாம் அல்லது க்ரீன் டீ, இலவங்கப்பட்டை தேநீர் போன்ற பானத்திற்கு மாறலாம். 



ALSO READ : உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் பப்பாளிக்காய் கூட்டு ...........



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!