நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா? இதனை எப்படி தடுக்கலாம் தெரியுமா?

 பொதுவாக வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதனால் பலரது முகம் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருக்கும். எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்தவாறு இருந்தால், முகம் பார்ப்பதற்கு அசிங்கமாகவும் கருமையாகவும் காணப்படும்.

இதனை நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இதற்காக கண்ட கண்ட பொருட்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.


  • தயிர் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதற்கு தயிரை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 

  • ஓட்ஸ், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
     எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள், ஓட்ஸ் மற்றும கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்து நன்கு கலந்து, முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

  • ஒரு பௌலில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். 

  • ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படும். 

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கோதுமை மாவில், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசையைக கட்டுப்படுத்தலாம்.

  • தக்காளியை வெட்டி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!