நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு பருவில்லாத பளபளக்கும் முகம் வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்

 இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.


இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும்.

அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இவற்றை எளியமுறையில் கூட போக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்போம்.  


  • வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். இதனால் பருக்கள் மங்கத் தொடங்கி, பின்னர் இரண்டு நாட்களில் மறையும்.

  • டீ ட்ரீ ஆயில்  இரண்டு துளிகள் எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டரை கலக்கவும். இப்போது அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, பருக்கள் மற்றும் வடுக்கள் மீது தெளிக்கலாம் அல்லது பஞ்சில் நனைத்து பருக்களின் மீது தடவவும். இது சருமத்திற்கு சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும்.  

  • வேப்ப இலைகளை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு இரவு அப்படியே வைக்கவும். மறுநாள், ஊறியிருக்கும் இலைகளை அரைத்து மாஸ்க் செய்து, பருக்களின் மீது தடவவும். வேப்பிலையை கொதிக்க வைத்த நீரில் முகத்தையும் கழுவலாம். இது நல்ல பலன் தரும்.

  • ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

  • கிரீன் டீ தயாரித்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தில் பருக்கள் உள்ள இடத்தை கழுவவும். இது பருக்களை மறையச் செய்யும். அதோடு சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!