நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஐஸ்க்ரீம் உருகவே உருகாதாம்: சீனா நிறுவனத்தின் அடேங்கப்பா முயற்சி -

 அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.


கோடைக்காலம் வந்தால் தான் ஐஸ்க்ரீம் என்றிருந்த காலம் போய், எப்போது வெண்டுமானாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று இப்போது மாறிவிட்டது.

ஐஸ்க்ரீமை பலவிதமாக நாம் ரசித்து உண்போம். சிலருக்கோ அது உருகி வழியும் முன் சாப்பிட்டுவிடவேண்டும். சிலர் அது உருகி கூழாக மாறிய பின் பருகுவார்கள். இப்படியிருக்க, சீனாவில் ஒரு ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பிராண்ட் உருகாத ஐஸ் க்ரீமை ஒன்றை தயாரித்துள்ளது. ஆம்! இது என்ன செய்தாலும் உருகாதாம்.


சைய்ஸ்கிரீம் (Chicecream) எனப்படும் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் இதை தயாரித்துள்ளது. இந்த ஐஸ்கிரீம் மீது நெருப்பை காட்டிய போதும் அது உருகாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.


பீஜிங்கை சார்ந்த இந்த நிறுவனம், நெருப்பால் சுட்டாலும் உருகாத "ஐஸ்கிரீம்களின் ஹேர்ம்ஸ்" என்ற தலைப்பிட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு மக்களின் ஈர்ப்பை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.


ஒரு புறம் இது மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் மக்களிடையே இதில் அதிக படியான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும், இதன் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

மக்களின் இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நிறுவனம் இதன் விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி விளக்கமளித்துள்ளது.

இதன் விலை 66 சீன யுவான். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி ரூ.780 என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும் அந்நாட்டின் சமூக வலைத்தளமான Weibo வில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பதிவிட்ட இந்த பதிவுக்கு 1.6 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர்.


AFP நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பயன்படுத்துவது தான். அதனால் இதில் பாதிப்புகள் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவின் மூத்த தேசிய உணவு பாதுகாப்பு ஆய்வாளர் Wang Silu இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிறுவனம் தன்னை Magnum, Haagen-Dazs போன்ற நிறுவனங்களின் சீன மாற்று நிறுவனம் என்று கூறியுள்ளது. அதாவது, இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களைக் கொண்டு இவர்கள் ஐஸ்கிரீம் தயாரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.




Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!