தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
இந்த ஐஸ்க்ரீம் உருகவே உருகாதாம்: சீனா நிறுவனத்தின் அடேங்கப்பா முயற்சி -
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.
கோடைக்காலம் வந்தால் தான் ஐஸ்க்ரீம் என்றிருந்த காலம் போய், எப்போது வெண்டுமானாலும் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று இப்போது மாறிவிட்டது.
ஐஸ்க்ரீமை பலவிதமாக நாம் ரசித்து உண்போம். சிலருக்கோ அது உருகி வழியும் முன் சாப்பிட்டுவிடவேண்டும். சிலர் அது உருகி கூழாக மாறிய பின் பருகுவார்கள். இப்படியிருக்க, சீனாவில் ஒரு ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பிராண்ட் உருகாத ஐஸ் க்ரீமை ஒன்றை தயாரித்துள்ளது. ஆம்! இது என்ன செய்தாலும் உருகாதாம்.
சைய்ஸ்கிரீம் (Chicecream) எனப்படும் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் இதை தயாரித்துள்ளது. இந்த ஐஸ்கிரீம் மீது நெருப்பை காட்டிய போதும் அது உருகாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பீஜிங்கை சார்ந்த இந்த நிறுவனம், நெருப்பால் சுட்டாலும் உருகாத "ஐஸ்கிரீம்களின் ஹேர்ம்ஸ்" என்ற தலைப்பிட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு மக்களின் ஈர்ப்பை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், இவர்கள் தயாரித்த ஐஸ்கிரீம் மீது 31 டிகிரி வெப்பநிலையில் நெருப்பை காட்டியபோதும், உருகாமலிருந்தது. இந்த வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது.
ஒரு புறம் இது மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், இன்னொரு பக்கம் மக்களிடையே இதில் அதிக படியான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்றும், இதன் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும் என்றும் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
மக்களின் இக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நிறுவனம் இதன் விலை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை பற்றி விளக்கமளித்துள்ளது.
இதன் விலை 66 சீன யுவான். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி ரூ.780 என்று தெரிவித்துள்ளது. மேலும் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவையே என்றும் அந்நாட்டின் சமூக வலைத்தளமான Weibo வில் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் பதிவிட்ட இந்த பதிவுக்கு 1.6 லட்சம் பேர் லைக் செய்து உள்ளனர்.
AFP நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஐஸ்கிரீம் நிறுவனங்களில் பயன்படுத்துவது தான். அதனால் இதில் பாதிப்புகள் இருக்காது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவின் மூத்த தேசிய உணவு பாதுகாப்பு ஆய்வாளர் Wang Silu இந்த ஐஸ்கிரீமை தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களும் பாதுகாப்பானது தான் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் தன்னை Magnum, Haagen-Dazs போன்ற நிறுவனங்களின் சீன மாற்று நிறுவனம் என்று கூறியுள்ளது. அதாவது, இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களைக் கொண்டு இவர்கள் ஐஸ்கிரீம் தயாரிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதில் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் பலரும் கோடைக்காலங்களில் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. எ ண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்குவது நல்லது. அதற்கு அரிசி மா பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்ல தீர்வினை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்த...
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
Comments
Post a Comment