நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்கள் அணியும் கொலுசின் பின்னால் இவ்வளவு ரகசியம் இருக்கின்றதா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க

 பெண்கள் நகை அணிவது என்பது பாரம்பரியமாகவே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. தங்களின் வசதிக்கேற்ப தங்கள், வெள்ளி, பிளாட்டினம் என நகைகளை அணிந்து வருகின்றனர்.


இதில் வெள்ளி நகை அணிவதால் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகின்றது.

குளிர்ச்சி தருணம் உலோகமான வெள்ளிக்கு இந்தியாவில் தனி மதிப்பு உண்டு. மற்ற நகைகளை அணிந்தால் சில தருணங்களில் ஒவ்வாமை ஏற்படுகின்றது. ஆனால் வெள்ளி நகைகள் அணிந்தால் அவ்வாறு எந்த ஒவ்வாமையும் ஏற்படாமல் இருப்பதோடு, ஆயுள் விருத்தியாகும் என்றும் ஆயுர்வேதம் கூறுகின்றது.

பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் சில மலைவாழ் மக்கள் இவ்வாறு அணிந்து வருகின்றனர். ஆனால் சமீப காலங்களில் நாகரீகத்திற்கு ஏற்ப பெண்கள் அணிந்து வருகின்றனர்.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

சிறுவயது குழந்தைகளின் அசைவினை கண்காணிக்கவும், குழந்தை நடக்கும் போது சங்கீதம் கேட்க வேண்டும் என்று கொலுசு அணிந்து விடுகிறோம்.

வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும்.

இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. 


ALSO READ : பூமியில் தங்கம் தோன்றியது எப்படி? ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!