நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குளிர்காலத்தில் சரும பராமரிப்புக்கு இந்த 4 போதும்

 குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது சகஜம். இருப்பினும் சருமத்தை நன்கு பராமரித்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது சகஜம். இருப்பினும் சருமத்தை நன்கு பராமரித்தால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். இந்த பிரச்சனைக்கு சில மூலிகைகள் தீர்வாக அமையும். இவை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும். அவை வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் பிற மதிப்புமிக்க கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இந்த பதிவில், குளிர்கால அழகுப் பராமரிப்பில் நீங்கள் சேர்க்கக்கூடிய அத்தகைய 4 மூலிகைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

1. துளசி

- துளசி (Tulsi) இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
- இலைகளை குளிர்வித்து பேஸ்ட்டை உருவாக்கவும்.

- இந்த பேஸ்ட்டை உங்கள் தோலில் தடவவும்.

- இது வீக்கத்தைக் குறைக்க உதவும்.

- இதனுடன், இது சருமத்தில் பளபளப்பைக் கூட்டுகிறது.

நன்மைகள் - 
துளசி பொதுவாக பல வகையான நோய்களுக்கு மருந்தாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலத்தில் மிகவும் பொதுவான சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்க இது உதவுகிறது.

2. மஞ்சள்

- முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்.

- சிறிது தயிரில் இதை ஒரு சிட்டிகை சேர்க்கவும்.

- இதனை தினமும் முகத்தில் தடவவும்.

-20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும்.

- இது முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.

நன்மைகள்- 
மஞ்சள் (Turmeric) சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றவும், வலி ​​மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.


3. நெல்லிக்காய்

- ஒரு கைப்பிடி உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து, கரகரப்பாக அரைக்கவும்.
- இதை 100 மில்லி தேங்காய் எண்ணெயில் கலக்கவும்.
- இந்த எண்ணெயை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும்.
- பின்னர் சுமார் 15 நாட்கள் வெயிலில் வைக்கவும்.
- இப்போது இந்த எண்ணெயை வடிகட்டி சேமித்து வைக்கவும்.
 - நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை உங்கள் தலைமுடியில் தடவவும்.
- இது முடி உதிர்வை குறைக்கும்.
- மேலும் முடி வலுவாக இருக்கும்.

நன்மைகள் - 
நெல்லிக்காய் ஆயுர்வேத சிகிச்சையில் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாகும். இது குளிர்காலத்தில் மிக எளிதாக கிடைப்பதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

4. கற்றாழை

- கற்றாழை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

- இதனால் சருமம் பளபளப்பாகும்.

- கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் பயன்படுத்தலாம்.

- அதை நேரடியாக முகத்தில் தடவவும்

- 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

நன்மைகள் - 
கற்றாழை (Aloe Vera) ஒரு சக்திவாய்ந்த மாய்ஸ்சரைசர். இது தோல் மற்றும் முடியின் வறட்சியை நீக்க உதவுகிறது. காயங்கள், தீக்காயங்கள் மற்றும் வெட்டுகளை குணப்படுத்தும் துத்தநாகமும் இதில் உள்ளது.

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இவை கல்வி நோக்கத்துடன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!