நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

4 கிலோ வரை உணவு உண்ணும் சாப்பாட்டு ராமனுக்கு ஓட்டல் செல்ல தடை

ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை.
பீஜிங்:

சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாக வலம் வருகிறார். இவர் அதிகமாக உணவு சாப்பிடுவதை வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த நகரில் ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு சென்று அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இவர் அந்த ஓட்டலுக்கு முதல்முறை சென்றபோது 1½ கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார்.

அடுத்த முறை ஓட்டலுக்கு சென்றபோது இதேபோல அதிக உணவுகளை சாப்பிட்டார். சமீபத்தில் அவர் அந்த ஓட்டலில் 4 கிலோ இறால் உணவுகளை சாப்பிட்டு தீர்த்தார்.

இதனால் அந்த ஓட்டலில் இனி ஹாங் நுழையக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த நிர்வாகத்தினர் கூறும்போது. அவர் எப்போது ஓட்டலுக்கு வந்தாலும் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதியை சாப்பிட்டு காலி செய்து விடுகிறார்.

எனவே மற்ற வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் ஓட்டலுக்கு வரக்கூடாது என நாங்கள் தடை விதித்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

ஆனால் ஹாங் கூறும் போது, ‘என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை ஓட்டல் நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது’ என்று கூறினார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!