அன்றாட உணவில் இந்த 4 மசாலாக்களை சேர்த்தால் போதும்... நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கவலையே வேண்டாம்...
- Get link
- X
- Other Apps
பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன.
1. மிளகு:
ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்த மிளகு, ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், குடல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸை எதிர்த்து போராடக்கூடிய வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
2.சீரகம்:
மிளகிற்கு அடுத்தபடியாக இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் சீரகம் ஆகும். கிட்டதட்ட இதனை அனைத்து உணவு வகைகளிலும் காணலாம். இரும்புச்சத்து நிறைந்த சீரகமானது, கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும் இந்த மசாலா பொருளில் அளவுக்கு அதிகமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
3. மஞ்சள் தூள்:
இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மழைக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தவும் பயன்படுகிறது. மஞ்சளில் நிறைந்துள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
4. வெந்தயம்:
நமது அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வெந்தயமானது, பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. வெந்தயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதனை தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவதோடு, உடல் எடையை குறைப்பதற்கும், சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
ALSO READ : குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா? அது நல்லதா?
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment