நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காய்ச்சல், சளி பிரச்சினை அடித்துவிரட்டும் சுக்குமல்லி காபி! தயார் செய்வது எப்படி?

 காலங்காலமாக நம் முன்னோர்கள் பருவ காலத்துக்கேற்ப உணவு முறையை மாற்றி கொண்டதில் சுக்கு மல்லி காபிக்கு தனி இடம் உண்டு.

சுக்கு எப்போதுமே மருத்துவத்தில் சிறந்த இடத்தை கொண்டிருக்கிறது. அதனால் தான் சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை என்று சொல்வார்கள்.

காய்ச்சல், கரகரப்பு, சளி பிரச்சனைகள் என வழக்கமாக மழையோடு வரக்கூடிய நோய்களை தடுப்பதில் சுக்கு மல்லி காபி பெரிதும் உதவும்.

சுக்கு மல்லி காபி பொடி வெளியில் கிடைக்கும் என்றாலும் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் வீட்டில் தயாரிக்கலாம்.

கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். எப்படி தயாரிப்பது, என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

சுக்குமல்லி காபி செய்முறை

ஒரு கப் மல்லி(தனியா) விதைக்கு, ஒரு பெரிய துண்டு சுக்கை எடுத்து இரண்டையும் தனித்தனியாகப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் சுக்குத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் என்ற அளவில் சேர்த்துக் கலந்து மூன்றையும் இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இதில் சிறிதளவு பால் சேர்த்து, பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தால் சுக்கு மல்லி காபி ரெடி.

சுக்கு மல்லி பொடி தயாரிக்கும் மற்றொரு முறை  

தேவையான பொருள்கள்

சுக்கு - கால் கப் அளவு


மிளகு - சுக்கு அளவில் பாதி அளவு


கொத்துமல்லி விதைகள் - அரை கப்


ஏலக்காய் - 15


செய்முறை

சுக்கை சுத்தம் செய்து உரலில் இட்டு நசுக்கி வைக்கவும். கொத்துமல்லி விதைகளை சுத்தம் செய்து வைக்கவும்.

அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும். ஈரம் படாமல் பார்த்துகொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து அதில் பொடியை சேகரித்து வைக்கவும்.

இந்த பொடி ஆறுமாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். 



ALSO READ ; காய்ச்சாத பாலை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்...


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!