நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தொப்புளில் தினமும் இரவு 2 சொட்டு நெய்… இவ்ளோ நன்மையா? இது தெரியாமப் போச்சே!

 சரும பிரச்சனைகள் முதல் மாதவிடாய் வலி வரை… தினமும் நெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளின் பட்டியல் இங்கே


நமது சருமம் பிரஷ்ஷாகவும் பொலிவாகவும் மாற நமது வீட்டிலேயே எளிய தீர்வுகள் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம், நமது சமையல் அறைகளில் உள்ள பொருட்கள் நமது உணவில் சுவை சேர்க்க பயன்படுவதோடு, நமது ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. அத்தகைய எளிய உணவு பொருட்களில் ஒன்று நெய். நமது ஆரோக்கியத்திற்கு நெய் பலவகைகளில் பங்களிக்கிறது. வாருங்கள் நெய்யின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நெய் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்துள்ளன.

சருமம் பொலிவுற மற்றும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு

உடலில் நெய்யால் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு நெய்யால் உடலை மசாஜ் செய்து குளிக்க வைத்தால் அவர்களுடைய சருமமும் பொலிவாக இருக்கும்.

தினமும் தொப்புளில் இரண்டு சொட்டு நெய் விட்டு மசாஜ் செய்து வந்தால் நமது சருமம் ஃபிரஷ் ஆகவும் பொலிவாகவும் இருக்கும். தினமும் இரவில் இதை செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் ஆகியவற்றை குறைக்க உதவும்.

வயிறு வலி, மலச்சிக்கலுக்கு தீர்வு

அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கும், அதிகமாக வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கும் நெய் மிகச்சிறந்த தீர்வாக உதவுகிறது. நெய்யை தினமும் சில துளிகள் எடுத்து தொப்புளில் விட்டு மசாஜ் செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். தினமும் தொப்புளில் நெய் தடவுவதன் மூலம் ஒரு வாரத்தில் உங்களால் சிறந்த பயனை அடைய முடியும்.

மாதவிடாய் வலிக்கு தீர்வு

தொப்புளில் நெய் சேர்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால் வயிற்று வலி குறையும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புகள் குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே தொப்புளில் நெய் சேர்த்து மசாஜ் செய்யும் பழக்கத்தை பின்பற்றினால் அந்த மாதவிடாய் கால வலி மற்றும் பிடிப்புகள் குறையும்.

தலைமுடி ஆரோக்கியம்

தலைமுடி பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக நெய் இருக்கும். குறிப்பாக சேதமடைந்த கூந்தலை சரிசெய்வதில் நெய் சிறப்பாகப் பங்காற்றும். தலைமுடி உதிர்தலை குறைக்கிறது. மேலும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும் நெய் உதவுகிறது.

மூட்டு வலிக்கு தீர்வு

ஆயுர்வேதத்தில் மூட்டுவலியைக் குறைப்பதற்கான மருந்துகள் பலவற்றிலும் நெய் சேர்க்கப்பட்டிருக்கும். நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள் நாள்பட்ட மூட்டு வலியையும் குறைக்கச் செய்யும். மற்ற மருந்துகளைக் காட்டிலும் எண்ணெய் மற்றும் நெய்க்கு குணப்படுத்தும் பண்புகள் அதிகம். அதனால் தினமும் தொப்புளில் நெய் தடவி மசாஜ் செய்து வந்தாலும் கூட மூட்டு வலி மற்றும் எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீரும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!